அரசாங்கம் கூறியது ஒன்று செய்வது ஒன்று! கண்டனத்தை வெளியிடும் ஐக்கிய மக்கள் சக்தி
உலகெங்கிலும் உள்ள நாடுகள் பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டிக்கும் பின்னனியில், இலங்கையில் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிம்ஷானி ஜய சிங்கராச்சிக்கு ஏற்பட்டுள்ள நிலை பெண்களுக்கு எதிரான அடக்குமுறையாகத்தான் பார்க்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தின் பிரதிச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹினி கவிரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று உலக நாடுகள் பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டிக்கின்றன எனவும் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு - எதுல் கோட்டேயில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், உலக மகளிர் தினத்தை கொண்டாட நாங்கள் தயாராகும் போது, இருபுறமும் பாலின சமத்துவம் புரிதலற்ற நிலை பற்றி பேசப்படுவதால் நாங்கள் வருத்தப்படுகிறோம்.
இன்று பெண்களை மெல்லிய நூல்களால் வேட்டையாடத் தொடங்கியுள்ளனர். எஹலே பொல குமாரி ஹாமி கொல்லப்பட்டார் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர் என்பனவற்றை சமூகம் அறிந்ததே. இன்று ஏன் பெண்கள் பணியிடத்தில் பல்வேறு வகையான துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர் என்று புரியாமல் இருக்கிறது. பின் நோக்கிய சிந்தனை தான் இன்று இந்நாட்டில் மோலோங்கி வருகிறது.
இது பாலியல் மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகங்களாகவும் இருக்கிறது. சட்டத்தில் கூட பல வகையான சட்டரீதியான துன்புறுத்தல்களுக்குக் கூட பெண்கள் ஆளாகின்றனர். பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினராக, தங்கள் தொழிலில் முன்னேற முடியாதா? பெண்களின் முன்வருகையை ஆண்கள் வித்தியாசமாக பார்ப்பதை நான் வெறுக்கத்தக்கதாக பார்க்கிறேன். ஆண்கள் அதை எதிர்ப்பது வெட்கக்கேடான விடயமாக நான் கருதுகிறேன்.
பெண் தொழிலாளர்கள் நம் நாட்டில் பதவிகளை வகிக்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ள வரலாறு கொண்ட பின்னனி எமக்குள்ளது. இந்த மதிப்புகளை நாம் ஒருபோதும் இல்லாமலாக்கக் கூடாது. 1960 இல் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமரானார், 1994 இல் சந்திரிகா பண்டாரநாயக்க நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு உயர்ந்தார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்தார்.
தலதா அத்துகோரல நீதி அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஷிராணி பண்டாரநாயக்க தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மேலும் பலர் சுங்கத் திணைக்களம், இறைவரித் திணைக்களம் போன்ற நிதி சார்ந்த விடயங்களை கையாலும் உயர் பதவிகளைக் கூட பெண்கள் வகித்தவன்னமுள்ளனர். அப்படியானால், பிம்ஷானி ஜயசிங்காரச்சி ஏன் பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி வகிக்க முடியாது? சுதந்திர இலங்கையின் சட்டமன்றம், ஆரம்பத்தில் இருந்தே பெண்களைக் அங்கத்தவர்களாக கொண்டிருந்தது.
ருவண்டா போன்ற ஒரு நாடு கூட ஒரு பெண் அரசியல் தலைவரால் அவரது திறமை மற்றும் நிர்வாகத்தின் காரணமாக உருவாக்கப்பட்டது. குறிப்பாக பெண்கள் தொழிலில் உயரும் போது ஆண்கள் கரம் கொடுக்க வேண்டும். இதற்கு நாங்கள் துணை நிற்க வேண்டும். இதைப் பற்றி உலக மகளிர் தினத்தில் மாத்திரம் பேசி பிரயோசனமில்லை. பெண்களின் சவால்களை ஏற்றுக்கொள்வதாக கூறி இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. பல்வேறு வாக்குறுதிகளை அளிப்பதன் மூலம் நாங்கள் தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவாக நிற்போம் என்று கூறினர்.
இன்று பெண் பொலிஸ் அதிகாரி இந் நட்டில் உயர் பதவிக்கு வர முடியாதா நிலை ஒரு சிலரால் ஏற்பபட்டுள்ளது. 2006 இல், ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவைக்கு ஒப்புதல் அளித்தது ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். பொலிஸ் பதவிகளில் 6% பெண்களால் நிரப்ப வேண்டும் என்று கூறப்பட்டது மாத்திரமல்லாமல் பொலிஸ் ஆணைக்குழு இந்த இட ஒதுக்கீட்டை ஏற்றுக் கொண்டது. பிம்ஷானியின் நியமனத்தின் சட்டப்பூர்வ சொற்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அதை சரிசெய்து நீதி வழங்கப்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
நாடாளுமன்ற மகளிர் மன்றமும், ஐக்கிய மக்கள் சக்தியாகவும், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், இத்தகைய செயற்பாடுகளை வெறுப்புடனும் கண்டிக்கிறோன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.