உணவு தவிர்ப்பு போராட்டம் - புதுக்குடியிருப்பில் கடைகள் பூட்டி ஆதரவு
நான்காவது நாளாக தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டத்துக்கு புதுக்குடியிருப்பு நகரில் கடைகள் பூட்டி மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் தமிழ் அரசியல் தலைமைகளை ஒன்றிணையக் கோரி முன்னாள் போராளியும் சமூக செயற்பாட்டாளருமான வேலுப்பிள்ளை மாதவமேஜர் அவர்கள் ஆரம்பித்த தொடர் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.
நீராகாரம் உணவு ஏதுமின்றி ஒன்பதாம் திகதி ஆரம்பித்த போராட்டம் இன்று நான்காவது நாளாக நடைபெற்று வருகின்ற நிலைமையில் பல்வேறு தரப்பினரும் அவருக்கு ஆதரவு வழங்கி வருகிறார்கள்.
பல்வேறு தரப்பினரும் ஆதரவு
இந்நிலையில் இன்றைய தினம் புதுக் குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூடி புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கம் புதுக்குடியிருப்பு முச்சக்கர வண்டிகள் சங்கம் புதுக்குடியிருப்பு அழகக உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு வழங்கிய கடைகளை பூட்டி போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.








நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
