கொரோனா தொற்றினால் மனைவி உயிரிழந்து மூன்று நாள்களின் பின்னர் கணவரும் உயிரிழப்பு!
Corona
Death
Jaffna
Nunavil
By Chanakyan
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மனைவி உயிரிழந்த மூன்று நாட்களின் பின்னர் கணவனும் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவமானது சாவகச்சேரி - நுணாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அதேயிடத்தைச் சேர்ந்த சேர்ந்த 96 வயது முதியவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
நுணாவில் கிழக்கைச் சேர்ந்த 90 வயதுடைய பெண் கடந்த 3ஆம் திகதி வெள்ளிக்கிழமைகொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் இன்னும் சுகாதார நடைமுறைகளின் கீழ் தகனம் செய்யப்படவில்லை.
இந்த நிலையில் அவரது கணவர் 96 வயதில் வைரஸ் தொற்றினால் நேற்று உயிரிழந்துள்ளார்.