அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஜே.வி.பி
இயற்கை உரம் எனக் கூறி இறக்குமதி செய்யப்படவுள்ள 'சீன குப்பை' களின் இறக்குமதியை உடன் நிறுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க கேட்டுக் கொண்டுள்ளார்.
சீனாவிலிருந்து 63 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்த உரம் இறக்குமதி செய்யப்படுகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
சீனாவின் மாநகராட்சி கழிவுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் நச்சு பாக்டீரியாக்கள் அடங்கிய உரத்தை அங்குள்ள கிங்டாவோ என்ற நிறுவனம் மூலம் இறக்குமதி செய்யவுள்ளது.
இந்த உரம் நமது பயிர்களுக்கு டிபரும் ஆபத்தை விளைவிக்கும். அத்துடன் நமது நாட்டிற்கும் தீங்கு விளைவிக்கும் பல நுண்ணுயிர்களைக் கொண்டிருக்கின்றது.
நாட்டின் வல்லுனர்களினால் சீனக் குப்பைகளை இறக்குமதி செய்யக்கூடாது என வலியுறுத்திய போதும் அரசாங்கம் அதனை எந்த அடிப்படையில் இறக்குமதி செய்யப் போகிறது என்றும் அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.