கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சிக்கிய சட்டத்தரணி! சிஐடி வெளியிட்ட அறிவிப்பு
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி தமரா அபேரத்ன போலி ஆவணங்களை சமர்ப்பித்து திறந்த 08 வங்கிக் கணக்குகளை விசாரித்து வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இந்த வழக்கு கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணி தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் போது தொடர்புடைய வங்கிக் கணக்குகள் பற்றிய தகவல்கள் தெரியவந்ததாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இதேவேளை, விசாரணைகளில் போலி தேசிய அடையாள அட்டையை சமர்ப்பித்து இந்த வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டதாக தகவல்கள் தெரியவந்ததாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இந்த வங்கிக் கணக்குகள் மூலம் அதிக அளவு பணம் மாற்றப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தாக கூறப்படுகிறது.
முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதிபதி, வங்கிக் கணக்குகள் குறித்து விசாரணைகளை நடத்தி அதன் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு தெரிவிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |