செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட சான்றுப்பொருள் தொடர்பில் வெளியான பின்னணி!
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் உள்ள செம்மணி இந்து மயானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரப் பொருளான S.25 என பெயரிடப்பட்ட காலணி, 1980 மற்றும் 1995 ஆண்டுகளுக்கு இடையில் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
செம்மணியில் அகழ்வாராய்ச்சி பணிகள் மற்றும் அதன் முன்னேற்றம் தொடர்பில் விசாரிக்கவும், அடுத்த கட்ட அகழ்வாராய்ச்சி தொடர்பில் தீர்மானிக்கவும் நீதிபதி லெனின் குமார் முன் நேற்று (03.11.2025) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்கு, விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வு பிரிவின் விசேட விசாரணைக் குழுவால், மேலதிக விசாரணை அறிக்கை மூலம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கையிடப்பட்டது.
வழக்கு விசாரணை
இந்த வழக்கின் விசாரணையை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வு பிரிவின் இரு அதிகாரிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது, தொடர் மழை காரணமாக செம்மணி மயானத்தில் சுமார் ஒன்றரை அடி உயரத்திற்கு நீர் தேங்கியுள்ளதால் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்வது நடைமுறைக்கு சாத்தியமில்லை எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, செம்மணி மனித புதைகுழியில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட 239 எலும்புக் கூடுகள் தொடர்பாக நீதித்துறை நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும் இதற்காக தனது தலைமையில் ஏழு பேர் கொண்ட விசேடக் குழுவை நியமிக்கவும், குழுவின் உறுப்பினர்களின் பெயர்களை நீதிமன்ற ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கவும் அவர் நீதிமன்றத்தைக் கோரினார்.
நீதிமன்ற உத்தரவு
குறித்த கோரிக்கையை பரிசீலித்த நீதிபதி, இந்தப் பணிக்கு அனுமதி வழங்கியதுடன் மேலும் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய தடயவியல் மருத்துவப் பணிகள் தொடர்பில் டிசம்பர் 15 ஆம் திகதி நீதிமன்றத்திற்குத் தெரிவிக்குமாறு மருத்துவ அதிகாரிக்கு நீதிமன்றம் அறிவித்தது.

எனினும், குற்றப் புலனாய்வு பிரிவு, முன்னர் குறிப்பிடப்பட்ட S.25 என நியமிக்கப்பட்ட காலணி தொடர்பாக மேலும் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது.
மேலும் நீதிமன்றத்தால் முன்னர் தெரிவிக்கப்பட்டபடி, காலணி தொடர்பான விசாரணைக்காக காலணி உற்பத்தி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நிறுவனம் மூலம் இந்த விடயத்தில் ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளதுடன் உற்பத்தி நிறுவனம் குறித்த காலணி 1980 முதல் 1995 வரை தயாரிக்கப்பட்டு சந்தைக்கு விநியோகிக்கப்பட்டது என தெரிவித்துள்ளது.
அதன்படி, செம்மணி இந்து மயானத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சிசிடிவி கமராக்கள் பொருத்தப்பட்டதிலிருந்து தொடர்ந்து அப்பகுதியை கண்காணிக்கவும் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மேலதிக விசாரணைகளை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்