மைத்திரியின் முக்கிய விசாரணை குழுவில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பசில்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட பாரிய ஊழல் மோசடிகளை ஆராயும் குழுவினால் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் ஊழல்களுக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் ஜாமினி கமன் துசாரவினால் குறித்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச 103 கோடி ரூபாவை மோசடியாக பயன்படுத்தியமை தொடர்பில் இலஞ்ச - ஊழல் ஆணைக்குழுவில் வாக்கு மூலம் வழங்கியதாக ஜாமினி கமன் துசார தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவில் முறைப்பாடு
ஆணைக்குழுவில் இன்று அவர் குறித்த முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்துரையாற்றிய அவர்,

“2025 .07.07 ஆம் திகதி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச 103 கோடி ரூபாவை மோசடி செய்ததாக ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளேன்.
இது தொடர்பில் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இன்றும் (2025.11.04) வாக்கு மூலம் அளித்துள்ளேன். முன்னதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட பாரிய ஊழல் மோசடிகளை ஆராயும் குழுவினால் பசில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.
2010 தொடக்கம் 2014 வரை உள்ளுர் போக்குவரத்துக்காக இலங்கை விமானப்படையின் விமானங்களை பயன்படுத்தியதற்காக மகநெகும நிதியில் 150 இலட்சம் மற்றும் ஜனாதிபதி செயலகத்திலுள்ள 14 வாகனங்களை பாவித்து 600 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பணத்தை வீணடித்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2015 ஆம் ஆண்டு பிரபுக்கள் பாதுகாப்புக்காக கடற்படை வீரர்கள் 64 பேரும் இராணுவத்தில் 84 பேரும் பயன்படுத்தியதற்காக 200 இலட்சம் வீணடிக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்