பொலிஸாருக்கு மதுபானம் விற்க முயன்ற நபர்!
Corona
Police
Arrest
SriLanka
By Chanakyan
பிறப்பிக்கப்படாத ஊரடங்கு நாடு முழுவதும் இன்று அமுல்ப்படுத்தப்பட்டிருக்கும் வேளையில்,மாந்தை கிழக்கு நட்டாங்கண்டல் பகுதியில் விற்பனைக்கு தயாராக இருந்த ஒரு தொகை மதுபான போத்தல்களை நட்டாங்கண்டல்பொலிஸார் மீட்டுள்ளனர்.
அத்துடன இடத்தை சேர்ந்த 39 வயது குடும்பஸ்தர் ஒருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நட்டாங்கண்டல் பொலிஸ் பரிசோதகர் விமல வீர அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்படி குறித்த இடத்திற்கு சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கு மதுபானங்களை விற்கும் போதே குறித்த நபர் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் உரிய சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்