ஈஸ்டர் தாக்குதல் : கர்தினால் மல்கம் ரஞ்சித்தை நோக்கி நீளும் சுட்டுவிரல்
ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான பயனாளி கர்தினால் மல்கம் ரஞ்சித் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிவித்துரு ஹெல உறுமய இன்று (22) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் அமைச்சர் உதய கம்மன்பில இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வணக்கத்திற்குரிய அருட்தந்தை சிறில் காமினியிடம் 10 கேள்விகளை முன்வைத்துள்ளார்.
நான்கு முறை பணி நீடிப்பு
கர்தினால் மல்கம் ரஞ்சித் 2022, நவம்பர் 15 அன்று கொழும்பு பேராயர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஏனெனில், அன்று அவருடைய 75வது பிறந்த நாளாக இருந்திருக்கும்.

ஆனால், ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னால் சக்திவாய்ந்த குழுக்கள் இருப்பதாகவும், அவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு தான் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்றும் கர்தினால் வத்திக்கானுக்குத் தெரிவித்துள்ளார். மேலும், கர்தினால் ஏற்கனவே நான்கு முறை பணி நீடிப்புகளையோ அல்லது மேலதிக பதவி உயர்வுகளையோ பெற்றுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்களின் உண்மையான பயனாளி
எனவே, திரும்பிப் பார்க்கையில், ஈஸ்டர் தாக்குதல்களின் உண்மையான பயனாளி கர்தினால்தான். பயனாளி குற்றவாளிதான் என்ற சதிக் கோட்பாட்டை நீங்கள் நம்பினால், அருட்தந்தை சிறில் காமினி அவர்களே, ஈஸ்டர் தாக்குதல்களுக்கான பொறுப்பை அதன் உண்மையான பயனாளியான கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் மீது ஏன் சுமத்தக் கூடாது? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |