விடுமுறையில் வந்த கடற்படைவீரரின் மற்றுமொரு கடமை -மடக்கி பிடித்த காவல்துறை
Sri Lanka Police
Gold smuggling
Sri Lanka Navy
By Sumithiran
வீதியொன்றில் பயணித்த பெண்ணொருவரின் கழுத்தில் இருந்த தங்க நெக்லஸை கொள்ளையடித்ததாக கூறப்படும் சிறிலங்கா கடற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக களுத்துறை வடக்கு காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் காணப்பட்ட பென்ரனுடன் கூடிய தங்க நகையும் காவல்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளது.
விடுமுறையில் வந்து

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை பிரதேசத்தை சேர்ந்தவர்.
சந்தேகத்திற்குரிய கடற்படை வீரர் முகாமில் இருந்து விடுமுறையில் வந்து நகையை கொள்ளையடித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.