ரவிராஜ் கொலையின் நிழல் யுத்தம்! மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு...

Tamils Sri Lanka Police Investigation Murder
By Dharu Mar 27, 2026 03:59 AM GMT
Report

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த கடற்படை வீரர்கள் உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.

அதன்படி, குறித்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதிவாதிகளை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை நீண்டகாலமாக விசாரணை செய்த பின்னரே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

பிள்ளையான கூறியதால் ரவிராஜை கொன்ற சம்பத் மனம்பேரி! மீண்டும் விசாரணைக்கு வரும் முக்கிய வழக்கு

பிள்ளையான கூறியதால் ரவிராஜை கொன்ற சம்பத் மனம்பேரி! மீண்டும் விசாரணைக்கு வரும் முக்கிய வழக்கு

படுகொலை சம்பவம்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான களான சசி மகேந்திரன் மற்றும் அமல் ரணராஜா ஆகிய நீதியரசர்கள் குழாமினால் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

ரவிராஜ் கொலையின் நிழல் யுத்தம்! மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு... | The Shadow War That Killed Raviraj

இதற்கமைய, மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லுபடி அற்றதாக ஆக்கப்பட்டுள்ளதோடு , குறித்த படுகொலை சம்பவம் தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (TNA) சார்பில் போட்டியிட்டு வந்த மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜ ரவிராஜ், 2006 நவம்பர் 10 அன்று கொழும்பில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்ட பின்னர் மருத்துவமனையில் காலமானார்.

கொழும்பில் உள்ள தனது வீட்டிலிருந்து பணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது அவர் சுடப்பட்டார்.

இந்தத் தாக்குதலில் அவரது பாதுகாவலர்களில் ஒருவரான சார்ஜென்ட் லக்ஷ்மன் லோகுவெல்லாவும் கொல்லப்பட்டார்.

மாமனிதர் ரவிராஜ் படுகொலையின் பின்னணியில் பிள்ளையான்: அம்பலமான புலனாய்வு தகவல்

மாமனிதர் ரவிராஜ் படுகொலையின் பின்னணியில் பிள்ளையான்: அம்பலமான புலனாய்வு தகவல்

ரவிராஜின் கொலை 

யாழ்ப்பாணத்தின் முன்னாள் மேயரும், தொழில் ரீதியாக வழக்கறிஞருமான நடராஜா ரவிராஜ், "ரவிராஜ் அண்ட் அசோசியேட்ஸ்" என்ற தனது சொந்த சட்ட நிறுவனத்தைக் கொண்டிருந்தார்.

ரவிராஜ் கொலையின் நிழல் யுத்தம்! மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு... | The Shadow War That Killed Raviraj

யாழ்ப்பாணம் தென்மராட்சித் துறையின் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ரவிராஜ் 1997 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாநகர சபைக்கு  தெரிவு செய்யப்பட்டார்.

அவர் 2001 பொதுத் தேர்தலில் முதன்முறையாக யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதிநிதியாகப் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2004-ஆம் ஆண்டில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மூத்த கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம் கொல்லப்பட்ட ஓராண்டுக்குள் ரவிராஜின் கொலை நிகழ்ந்துள்ளது.

கொலைக்கு முந்தைய நாள் (நவம்பர் 9, 2006), ரவிராஜ் கொழும்பில் உள்ள UNICEF அலுவலகத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தார்.

வஹாரை (Vaharai) பகுதியில் அரச படையினரின் குண்டு வீச்சில் 45–47 தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்த்து இது நடைபெற்றது.

கொலை நாள் காலையில்(நவம்பர் 10, 2006) (7:00–8:00 மணி) தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார்.

அதில் தமிழ் மக்களின் பிரச்சினைகள், அரசின் செயல்கள் குறித்து ஆணித்தரமான கருத்துக்களைத் விவரித்துள்ளார்.

அந்தக் காலகட்டத்தில் (2006) இலங்கை உள்நாட்டுப் போர் தீவிரமடைந்திருந்தது. 

ரவிராஜ் படுகொலை வழக்கில் ராஜபக்சர்களின் முன்னாள் சகாவுக்கு தொடர்பு : கசிந்த அதிர்ச்சி தகவல்

ரவிராஜ் படுகொலை வழக்கில் ராஜபக்சர்களின் முன்னாள் சகாவுக்கு தொடர்பு : கசிந்த அதிர்ச்சி தகவல்

ஐந்து  சந்தேநபர்கள்

 அரச படையினருடன் இணைந்து செயல்பட்ட சில குழுக்களாலாக கருதப்பட்ட கருணா குழு , TMVP குழு  இந்தக் கொலையைச் செய்ததாக தழிழர் தரப்புக்கள் குற்றம் சாட்டின.

அரச புலனாய்வு குறித்தும் தமிழர் தரப்புகளால் சந்தேகம் வெளியிடப்பட்டது.

இது தொடர்பான வழக்கில் 2016 டிசம்பர் 24 அன்று கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த வழக்கின் சந்தேநபர்களாக அடையாளமிடப்பட்ட ஐந்து பேரையும் விடுதலை செய்தது.

இதற்கு சாட்சிகள் போதியளவு இல்லை என்று கருதப்பட்டது.  

இது தொடர்பில் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் மேன்முறையீடு செய்திருந்தார்.

இதன்போது வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. சில அறிக்கைகள் உள்ளன.

இதன் தொடர்ச்சியாக 2025 வரை சில புதிய சாட்சியங்கள் குறிப்பாக பிள்ளையான், சம்பத் மனம்பேரி போன்றோர் பெயரும் பேசப்பட்டது.

 ரவிராஜ் கொலை இந்த  நிழல் யுத்தத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. உலக அளவில் பல நாடுகள் மற்றும் அமைப்புகள் இந்தக் கொலையைக் கண்டித்தன.

இன்றுவரை (2026) இந்த வழக்கில் முழுமையான நீதி கிடைக்கவில்லை என்பது தமிழ் அரசியல் தரப்புகளின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது.  

தடம் மாறும் அரசியல் தலைமைகளின் மத்தியில் மாமனிதர் நடராஜா ரவிராஜின் நினைவுகள்

தடம் மாறும் அரசியல் தலைமைகளின் மத்தியில் மாமனிதர் நடராஜா ரவிராஜின் நினைவுகள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

தங்கோடை காரைநகர், Scarborough, Canada

09 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, திருவையாறு

10 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, Chelles, France

12 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநகர், நாவாந்துறை, Bergen, Norway

11 May, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016