இலங்கையில் சிங்கங்களைத் தொடர்ந்து குரங்குகளிற்கு ஏற்பட்ட நிலை!
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 4 குரங்குகள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தெஹிவளை மிருகக்காட்சிசாலையிலுள்ள சிம்பன்சி வகையைச் சேர்ந்த இரு குரங்குகளுக்கும் ஓரங்குட்டான் வகையைச் சேர்ந்த இரு குரங்குகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தொற்றுக்குள்ளான மேற்படி விலங்குகளின் உணவு உட்கொள்ளல் முறைமையில் எவ்வித மாற்றங்களும் அவதானிக்கப்படவில்லை.
இந்த நான்கு குரங்குகளும் ஏனைய விலங்குகளிடமிருந்து பிரிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை மேற்படி குரங்குகளுக்குத் தொடர்ந்தும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமை காணப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.