நடுவீதியில் சண்டித்தனம் - காவல்துறை அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை
police
attack
transfer
By Sumithiran
பட்டப்பகலில் சட்டத்தரணியின் மகன் ஒருவரை நடு வீதியில் வைத்து தாக்கியதாக தெரிவிக்கப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சப்ரகமுவ மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு என்பவரே இடமாற்றப்பட்டுள்ளார்.
அவர் வைத்திய சேவைகள் மற்றும் நலன்புரி சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த அதிகாரியின் தவறான நடத்தை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
you may like this