பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள சூயஸ் கால்வாய்! செங்கடலில் விரிவடையும் ஈரான் யுத்தம்
அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்த ஈரானுடனான தீவிர போர் காரணமாக, உலக வர்த்தகத்தின் மிக முக்கிய கடல் பாதையான சூயஸ் கால்வாய் மீண்டும் பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளது.
எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தாஹ் அல்-சிசி இதை "பெரிய பொருளாதார அச்சுறுத்தல்" என்று எச்சரித்துள்ளார்.
போரின் தொடக்கத்தில் இருந்தே, ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியதால் எண்ணெய் கப்பல்கள் பாதிக்கப்பட்டன. இதன் தாக்கம் தற்போது செங்கடலுக்கும் பரவியுள்ளது.
ஈரான் ஆதரவு
ஈரான் ஆதரவு பெற்ற யேமனின் ஹூதி படைகள் செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல் மீண்டும் தொடங்கும் அபாயத்தை வெளிப்படுத்தியுள்ளன.

குறிப்பாக ஹோர்முஸ் நீரிணைபோல மத்தியக்கிழக்கு கடல் போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பாப் எல்-மண்டேப் நீரிணையை (Bab el-Mandeb Strait) ஆபத்தாக்கும் இந்த அச்சுறுத்தல், சூயஸ் கால்வாய் வழியாக செல்லும் போக்குவரத்தை நேரடியாக பாதிக்கிறது.
இதன்படி முக்கிய கடல்சார் நிறுவனங்கள் குறிப்பாக செங்கடல் வழியை தவிர்த்து, நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) (ஆப்பிரிக்காவை சுற்றும் நீண்ட பாதை) வழியாக கப்பல்களை திருப்பி அனுப்பி வருகின்றன.
சூயஸ் கால்வாய் போக்குவரத்து
இதனால் சூயஸ் கால்வாய் போக்குவரத்து ஏற்கனவே சுமார் 50% அளவுக்கு குறைந்துள்ளது என்று எகிப்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சில அறிக்கைகளின்படி, போர் தொடங்கிய பின்னர் சில நாட்களில் குறைந்தபட்சம் 30-50% வரை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
எகிப்து ஜனாதிபதி அல்-சிசி, "போர் நீடித்தால் சூயஸ் கால்வாய் மீது பெரும் தாக்கம் ஏற்படும்" என்று கூறியுள்ளார்.
குறிப்பாக உலக வர்த்தகம், எண்ணெய் விலை, கப்பல் செலவுகள் ஆகியவை ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளன.
இதன்படி எகிப்து அரசு இதை அவசரநிலை என்று கருதி, பொருளாதார நிலைமையை கண்காணித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |