உலகின் மிகப்பெரிய மிதக்கும் புத்தகக் கண்காட்சி கப்பல் லண்டனில்
உலகின் மிகப்பெரிய மிதக்கும் புத்தகக் கண்காட்சிக் கப்பலான Logos Hope, தனது “Waves of Hope” சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக லண்டனுக்கு வருகைத்தந்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் இணைந்து செயல்படும் இந்தக் கப்பல், அறிவு, உதவி மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை உலக மக்களுடன் பகிர்ந்து வரும் ஒரு தனித்துவமான முயற்சியாகும்.
65-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்கள் பணியாற்றும் Logos Hope, ஐக்கிய இராச்சியத்தின் ஆறு துறைமுகங்களுக்கு பயணம் மேற்கொண்டு, மக்களிடையே நம்பிக்கையை விதைப்பதோடு, சமூக மாற்றத்திற்காக இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.
5,000-க்கும் மேற்பட்ட புத்தகங்க
இந்தக் கப்பலில் அனைத்து வயதினருக்கும் ஏற்ற 5,000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், பார்வையாளர்கள் Hope Café-இல் சிற்றுண்டிகளைச் சுவைக்கவும், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்களைச் சந்திக்கவும், கப்பலில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளில் பங்கேற்கவும் வாய்ப்பு பெறுவர்.
Logos Hope கப்பல் 2026 ஜூன் 21 முதல் ஜூலை 5 வரை லண்டனிலுள்ள ExCeL Centre-இல் பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும். செவ்வாய்க்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 1.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பார்வையிடலாம்.
மேலதிக தகவல்களுக்கு uk.om.org/waves-of-hope-london என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். “Waves of Hope” பயணத்தின் ஒரு பகுதியாக அனைவரையும் வரவேற்க Logos Hope குழுவினர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 9 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்