"தீப்பந்தம்" ஈழத்தின் உணர்வுகளை பேசும் முழுநீள திரைப்படம்
"தீப்பந்தம்" – ஈழத்தின் உணர்வுகளைச் சுடரேற்றி எளிய மக்கள் மொழியில் பேசும் ஒரு முழுநீள திரைப்படம் தாயக கலைஞர்களின் முழுமையான பங்களிப்புடன் உருவாகியுள்ள திரைப்படம் "தீப்பந்தம்", உலகத் தமிழர்களின் மனங்களில் உணர்வுப் பெருக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன் மே 31 அன்று திரைக்கு வருகிறது.
மண்ணின் வாசனையை மாறாமல் பாதுகாத்தும், மக்களின் வாழ்வியலை எளிமையாகவும் தத்ரூபமாகவும் பிரதிபலிக்கும் வகையில், இத்திரைப்படம் உணர்வும், உண்மையும் கலந்த ஒரு அரிய கலை முயற்சியாக உருவெடுத்துள்ளது.
ஈழத் தமிழர் சமூகச்சாயலும், கலாச்சார அடையாளங்களும், மனதை இணைக்கும் பின்னணியுடன் "தீப்பந்தம்" பயணிக்கிறது.
சர்வதேச திரைப்பட விழா
இது வாடும் நினைவுகளின் அழுத்தமான குரலாகவும், எதிர்காலத்துக்கான ஓர் அழைப்பாகவும் அமைகிறது. இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் தாயகத்தைச் சேர்ந்த திறமையான இயக்குனர் ராஜ் சிவராஜ் இசையமைப்பை வழங்கியுள்ளார்.
மண்ணின் மைத்தன் பூவன் மதீசன். தயாரிப்பை Amlus Productions செய்துள்ளது, உலகத் தமிழரிடையே கவனிக்கத்தக்க இடம் பிடித்த முன்னணி கலைஞர்கள், இப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரங்களில் தங்களது அபிநயத்திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.
இத்திரைப்படம், “புத்திகெட்ட மனிதர்கள்”, “டக் டிக் டோஸ்” போன்ற திரைப்படங்களையும், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட “குமரி கண்ட குமரன்” ஆவணப்படத்தையும் உருவாக்கிய Blackboard International நிறுவனத்தின் மற்றொரு புதிய ஆழமான முயற்சியாகும். "தீப்பந்தம்" — இது வெறும் திரைப்படமல்ல; இது உணர்வுகளின் தீப்பந்தம்.
மக்களின் நினைவுகளை மீட்டெடுக்கும் ஓர் ஒளிச் சுடர். மே 31 அன்று, தாயகம், கனடா, பிரித்தினியா, சுவிஸ் போன்ற இடங்களில் உங்கள் மனங்களில் அந்தச் சுடரை ஏற்றுகின்றது. தாயாக மக்களாக தயாராகுங்கள்!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
