தடுப்பு காவலில் சுரேஷ் சலேவுக்கு நடந்தது இதுதான்! அமைச்சர் விஜேபால அதிரடி
முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டுள்ள காலத்தில் அவர் உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகப் பரவி வரும் வதந்திகள் முற்றிலும் பொய்யானவை என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள தனிப்பட்ட செவ்வியில், அவர் இவ்வாறு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டிருந்தால், உடல்நலக்குறைவுற்ற போது ஏன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே, சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டுள்ள காலத்தில் அவருக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பொய்யான கதை
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “சுரேஷ் சலே உடல் ரீதியாகச் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார் என்பதை நான் முற்றாக மறுக்கிறேன். அது முற்றிலும் ஒரு பொய்யான கதையாகும்.

அவரை அவ்வாறு சித்திரவதை செய்ய வேண்டும் என்ற நோக்கம் இருந்தால், அவருக்கு எந்தவொரு சிகிச்சையையும் வழங்காமல் சித்திரவதை செய்திருக்க முடியும்.
அவருக்குப் பல் வலி ஏற்பட்ட போது பல்லுக்குச் சிகிச்சை அளித்து, கண் பிரச்சினைகளுக்குச் சிகிச்சை வழங்கி, அவரது குடும்பத்தினர் வந்து பார்ப்பதற்கு அனுமதி அளித்து, வீட்டிலிருந்து உணவு கொண்டு வர அனுமதித்து, அவர் நோய்வாய்ப்பட்ட போது வைத்தியசாலையிலும் அனுமதித்திருக்கிறோம் என்றால் அது எப்படிச் சித்திரவதையாகும்?
ஒருவரைச் சித்திரவதை செய்வதாக இருந்தால், அவரை ஏன் இந்தளவுக்குப் பராமரிக்க வேண்டும்?" என்று அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! . |