திலீபனின் நினைவூர்தி பேரணிக்கு யார் அனுமதி கொடுத்தது..! கொந்தளிக்கும் இனவாத எம்.பி

Sri Lankan Tamils Government Of Sri Lanka Ethnic Problem of Sri Lanka Udaya Gammanpila
By Vanan Sep 19, 2023 04:17 AM GMT
Report

திலீபனின் நினைவூர்தி பேரணி என்பது இனவாதத்தையும் மக்கள் மத்தியில் குரோதத்தையும் ஏற்படுத்தும் சதித்திட்டமாகும் என பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவரும், இனவாதத்தைக் கக்கும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.

நினைவூர்தி பேரணி தொடர்பில் நேற்று(18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறிய அவர், காடையர்களின் தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

யார் அனுமதி கொடுத்தது?

அவர் மேலும் தெரிவிக்கையில், “திலீபன் என்பவர் யார்? நாட்டை பிளவுபடுத்தும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முயற்சிக்கு தலைமை தாங்கியவர்.

திலீபனின் நினைவூர்தியை விடாது துரத்தும் புலனாய்வாளர்கள்(படங்கள்)

திலீபனின் நினைவூர்தியை விடாது துரத்தும் புலனாய்வாளர்கள்(படங்கள்)

திலீபனின் நினைவூர்தி பேரணிக்கு யார் அனுமதி கொடுத்தது..! கொந்தளிக்கும் இனவாத எம்.பி | Thileeipan S Memorial Rally Udaya Gammanpila

பிரிவினைவாதத்தையும் தீவிரவாதத்தையும் நாட்டில் பரப்பும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நோக்கத்திற்காக தமது உயிரை பலி கொடுத்த ஒருவராவார்.

விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது இந்த நாட்டில் தடை செய்யப்பட்ட இயக்கமாகும்.

சிவப்பு மஞ்சள் கொடிகளால் வாகனம் ஒன்றை அலங்கரித்து அதில் திலீபனின் பாரிய நிழற்படம் ஒன்றை வைத்துக்கொண்டு கிழக்கில் இருந்து வட மாகாணத்திற்கு வாகனப் பேரணி ஒன்றை மேற்கொள்வதற்கு யார் அனுமதி கொடுத்தது?

எவரேனும் ஒரு உத்தியோகத்தர் அதற்கு அனுமதி வழங்கியிருப்பாராயின் அவர் இலங்கை அரசியலமைப்பின் 157 சரத்தை முழுமையாக மீறி பிரிவினைவாதத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான நிலை : கூட்டமைப்பு மீது விசனம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான நிலை : கூட்டமைப்பு மீது விசனம்

மூன்று தசாப்தங்களாக விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண சிங்கள மக்களின் கிராமங்களுடாக இவர்கள் பயணித்தமை கட்டாயமாக இனவாதத்தையும் மக்கள் மத்தியில் குரோதத்தையும் ஏற்படுத்தும் சதித்திட்டமாகும்.

2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனத்தின் 3ஆவது சரத்தின் கீழ் இனவாதம், மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி குரோதத்திற்கு வித்திடும் அனைத்து நடவடிக்கைகளும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

அரசாங்கம் உடனடியாக இந்த இரண்டு விடயங்கள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரணில் விச்ரமசிங்க ஆட்சிக்கு வந்த சந்தர்ப்பங்களில் மாத்திரமே எப்போதும் பிரிவினைவாதிகளும் கடும்போக்கு வாதிகளும் எழுச்சி பெறுகின்றனர்.

அது சரியாக மழை காலத்தில் அட்டைகள் துடிப்பதற்கு நிகரானது.

பேரணிக்கு ரணில் விக்ரமசிங்கவின் அனுசரணை இருந்ததா?

திலீபனின் நினைவூர்தி பேரணிக்கு யார் அனுமதி கொடுத்தது..! கொந்தளிக்கும் இனவாத எம்.பி | Thileeipan S Memorial Rally Udaya Gammanpila

கஜேந்திரன் மீதான காடையர்களின் தாக்குதல் : பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கண்டனம்

கஜேந்திரன் மீதான காடையர்களின் தாக்குதல் : பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கண்டனம்

இந்தப் பேரணிக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அனுசரணை இருந்ததாக இல்லை.

அவரது வலுவற்ற ஆட்சியின் போதே எப்போதும் பயங்கரவாதிகள், கடும்போக்கு வாதிகள் எழுச்சி பெறுகின்றனர்.

புலிப் பயங்கரவாதம் ரணில் விக்ரமசிங்கவின் 2003 - 2004 ஆட்சியிலேயே வலுவடைந்தது. முஸ்லிம் பயங்கரவாதமும் அவரது 2015 - 2019 ஆட்சியிலேயே எழுச்சி பெற்றது.

ஆகவே இந்த நாட்டில் பயங்கரவாதமும் கடும்போக்கு வாதமும் அவரது அதிகரிக்க அவரது வலுவற்ற தன்மையே காரணமாக அமைந்துள்ளது.

தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், பொதுமக்கள் பேரணிகளை முன்னெடுக்கும் போது தடை உத்தரவு பெறுகின்ற இந்த அரசாங்கம், பிரிவினைவாதம், பயங்கரவாதம், இனவாதத்தைப் பரப்பும் பாரிய பேரணியை ஏன் தடுக்கவில்லை என நாம் கேள்வி எழுப்புகிறோம்” என்றார்.


YOU MAY LIKE THIS VIDEO


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சரவணை மேற்கு, வெள்ளவத்தை

31 Oct, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Hannover, Germany

30 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024