விடுதலைப் புலிகள் அமைப்பின் மெய்யான வாரிசுகள் யார்..! திலீபன் போன்று தியாகத்துக்கு தயாரா..!
தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பின் மெய்யான வாரிசுகள் யார்? அதற்கு யார் உரித்துடையவர்கள்? எனும் பிரச்சினை காரணமாகத்தான் தியாக தீபம் திலீபன் நினைவேந்தலில் குளறுபடிகள் ஏற்பட்டது என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் கூறுகிறார்.
எமது ஊடகத்தின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சமகால அரசியல் விடயங்களை அலசி ஆராயும் போது இந்த விடயத்தைக் கூறிய அவர், ஜெனிவாவில் வரப்போகின்ற தீர்மானம் குறித்த கவனம் தமிழர் தரப்பிடம் சிதறிப் போயிருக்கிறது. நாங்கள் ஒரு தேசமாக இல்லை. நீதி கோரும் மக்களாகவும் நாம் சிதறிப் போயிருக்கிறோம் எனக் கூறினார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குள் ஏற்பட பிளவு தான் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளில் குழப்பங்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருந்தது. இதுதான் அடிப்படை உண்மையும் கூட.
இந்த விடயத்தில் கூட்டமைப்பு விலகி நின்று வேடிக்கை பார்க்கிறது. கூட்டமைப்பு இந்த குழப்பத்திற்குள் வரவும் இல்லை.
திலீபனின் எதிர்பார்ப்பு
திலீபன் ஒரு வசனம் கூறியிருந்தார் “நான் வானத்திலிருந்து கொண்டு என் மக்கள் விடுதலை அடைவதை பார்ப்பேன் என்று” ஆனால் இந்த முறை அவர் வானத்தில் இருந்து கொண்டு தன் மக்கள் மோதிக்கொள்வதை தான் பார்த்திருப்பார். அப்படித்தான் சொல்லவேண்டி இருக்கிறது.
உண்மையிலேயே கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு முன்னாள் இயக்கத்தவர்களை மோசமாக அவமதிக்கும் நிலைக்கு கொண்டுபோய் விட்டிருக்கிறது.
முன்னாள் போராளிகள் என்று கூறும் பொழுது அவர்கள் இப்போது போராளிகள் அல்ல என்று அர்த்தம் வரும்.
இதனால், போராளி என்பது ஒரு தொழிலாக விடும். இல்லை, போராளி என்பவர் எப்பொழுதுமே போராளி தான். சிறுமை கண்டு பொங்கும் அனைவருமே போராளிகள் தான்.
திலீபனின் புனிதமான நாளில் குழப்பம் நிகழ்ந்தது எப்படி..! சாட்சியமாக மாறிய காக்கா அண்ணா |
முன்னாள் போராளிகள்
போராளிகள் கட்டாயம் ஆயுதம் ஏந்திய இயக்கத்தில் தான் இருக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல. அவர்கள் இயக்கங்களில் அல்லது கட்சிகளில் தான் இருக்க வேண்டும் என்றும் அல்ல. சமூக மட்டங்களிலும் போராளிகள் இருக்க முடியும். இந்த இடத்தில் தான் முன்னாள் போராளிகள் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
நினைவு கூறும் இடத்தில் நினைவு கூர்தலின் அமைதியை, கட்சிகள் தங்களுக்கு இடையில் மோதி, அதில் முன்னாள் இயக்கத்தவர்களையும் தத்தமது பக்கம் இழுத்துக்கொண்டு மோத வைத்திருக்கிறது.
இந்த மக்களுக்காக இனி யாருமே போராடத் துணிய மாட்டார்கள் என்கின்ற ஒரு நிலையைத் தான் இந்த நினைவேந்தல் குழப்பங்கள் ஏற்படுத்திவிட்டு இருக்கிறது.
அண்மை நாட்களில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் முப்பத்தி ஐந்தாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளில் இடம்பெற்ற குளறுபடிகள், அதன் பின்னால் இருந்த சக்திகள், அது வழிநடத்தப்பட்ட விதம், அதன் பின்னால் இருக்கும் அரசியல், இதனால் தமிழர் தரப்புக்கு ஏற்பட்ட நிலைமைகள் தொடர்பாக பல விடயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் தெரிவித்த விடயங்களை காணொளியில் காண்க,