தமிழர் பகுதியில் பரபரப்புக்கு மத்தியில் திரை நீக்கம் செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலை

Sri Lanka Police Tamils Ampara Kalmunai
By Sathangani Jan 20, 2025 05:47 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

அம்பாறையில் (Ampara) நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட சர்ச்சைக்கு மத்தியில் திருவள்ளுவர் சிலை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

அம்பாறை - கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிட்டங்கி வீதியில் அமைந்துள்ள கல்முனை தமிழர் கலாசார பேரவை வளாகத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பிற்கும் மத்தியிலும் குறித்த சிலை நேற்று (19) மாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த திருவள்ளுவர் சிலை அனுமதியற்ற கட்டுமானம் என குறிப்பிட்டு ஏழு நாட்களுக்குள் அகற்றுமாறு மாநகர சபை உத்தரவு பிறப்பித்து தமிழர் கலாசார அபிவிருத்திப் பேரவை செயலாளருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்

நீதிமன்ற தடை உத்தரவு

அத்துடன் சிலையை அகற்ற தவறும் பட்சத்தில் தங்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்பதனை அறியத்தருவதாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியில் பரபரப்புக்கு மத்தியில் திரை நீக்கம் செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலை | Thiruvalluvar Statue Removed Amid Commotion

இதேவேளை கல்முனை தலைமையக காவல் நிலைய பொறுப்பதிகாரியின் முறைப்பாட்டிற்கமைய கல்முனை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான்  திருவள்ளுவர் சிலை திறப்புவிழா நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து கல்முனை தமிழ் கலாசார பேரவை தலைவர், செயலாளர், உப தலைவர் ஆகியோருக்கு தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அநுர அரசுக்கு ஆப்பு : ரணில் அமைக்கும் வியூகம்

அநுர அரசுக்கு ஆப்பு : ரணில் அமைக்கும் வியூகம்

நிகழ்வில் கலந்துகொண்டோர்

இந்த நிலையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் குறித்த திருவள்ளுவர் சிலை நேற்று திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

தமிழர் பகுதியில் பரபரப்புக்கு மத்தியில் திரை நீக்கம் செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலை | Thiruvalluvar Statue Removed Amid Commotion

குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மற்றும் வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ், கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவை உறுப்பினர்கள் உட்பட கல்முனை பிராந்திய இளைஞர் அமைப்புகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மதச்சார்பற்ற இலங்கையை உருவாக்க முனையும் அநுர அரசு : சாடும் விமல் வீரவன்ச

மதச்சார்பற்ற இலங்கையை உருவாக்க முனையும் அநுர அரசு : சாடும் விமல் வீரவன்ச



YOU MAY LIKE THIS


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025