நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்கள் விபரம்: வெளியான புள்ளிவிபரம்
Sri Lanka
Sri Lanka visa
By pavan
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்ததைத் தொடர்ந்து இதுவரை வரை 200,000 க்கும் அதிகமான இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
அதாவது, நேற்று மாலை வரை மொத்தமாக 200,026 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம்
இதேவேளை, கடந்த வருடம் மொத்தமாக 311,000 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக வெளியேறியிருந்தனர், இதுவே அதிக எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறுபவர்களின் எண்ணிக்கை 300,000 ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளால் பெருமளவிலான மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.