ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்! அமெரிக்கா தரப்பு வெளியிட்டுள்ள தகவல்
மூன்று எண்ணெய் கப்பல்கள் மீதான ஈரானின் தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்கக் கடற்படை தலைமையிலான கூட்டு கடல்சார் தகவல் மையம் (JMIC), ஹோர்முஸ் நீரிணையை கடப்பதற்கான அச்சுறுத்தல் அளவை உயர்த்தியுள்ளது.
சமீபத்தில் உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள், அச்சுறுத்தல் சூழல் தொடர்ந்து அதிகரித்திருப்பதையும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 15-க்குப் பிறகு, அச்சுறுத்தல் நிலை கடுமையான நிலைக்கு உயர்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும் என்று கூறப்படுகிறது.
ஈரானிய தாக்குதல்
இந்த நிலையில், அமெரிக்க கடற்படை தொடர்ந்தும் ஹோர்முஸ் நீரிணையில் நிலைத்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்றுகொண்டிருந்த வர்த்தகக் கப்பல்கள் மீது, ஈரானின் புரட்சிகர காவல் படையினர் திங்கட்கிழமை கடுமையான தாக்குதல்களை முன்னெடுத்திருந்ததன் பின்னணியில் மேற்கண்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |