உள்ளூராட்சித் தேர்தல்2025 : வாக்களிப்பை தவிர்த்த முன்னாள் ஜனாதிபதிகள்
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிகள் முன்று பேர் வாக்களிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. நாடளாவிய ரீதியிலுள்ள 13,759 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கு பதிவுகள் இடம்பெற்றன.
முன்னாள் ஜனாதிபதி
வாக்களிப்பு நிறைவடைந்தவுடன், அந்ததந்த வாக்களிப்பு நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு தேர்தல் முடிவுகளும் வெளியாகின.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) , கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) மற்றும் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) ஆகியோர் வாக்களிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளின் வருகைக்காக ஊடகவியலாளர்கள் காத்திருந்தபோது, மைத்திரிபால, கோட்டாபய மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் வாக்களிக்க வரவில்லை என்று அந்தந்த சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஊடகவியளாலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
