இரணைமடு நீர் வெளியேறும் வாய்க்காலுக்குள் திடீரென பாய்ந்தது முச்சக்கரவண்டி
accident
kilinochchi
auto
By Sumithiran
கிளிநொச்சியில் வீதியால் சென்ற முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று (25) நண்பகல் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வீதியால் சென்ற முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து கிளிநொச்சி ஐந்தடி வான் பாலத்தில் பயணித்துக் கொண்டிருந்தவர்கள் மீது மோதி அதன் தொடராக இரணைமடுவிலிருந்து நீர் வெளியேறிப் பாயும் வாய்க்காலுக்குள் பாய்ந்துள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டி நீரில் மூழ்கிய நிலையில் அதனை செலுத்தி வந்த சாரதி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி