முச்சக்கரவண்டி சாரதிகளே அவதானம்! கிளம்பியுள்ள புதிய கொள்ளை கும்பல்
சாரதியைத் தாக்கி முச்சக்கர வண்டியொன்றைத் திருடிய சம்பவம் தொடர்பில் மொரகஹதென்ன காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சாரதியிடம் இருந்து 11 ஆயிரம் ரூபா பணம், இரண்டு கையடக்க தொலைபேசிகள் மற்றும் முச்சக்கர வண்டியின் ஆவணங்களையும் குறித்த குழு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குழந்தையை தூக்கிக்கொண்டு பெண்ணொருவர் இரு ஆண்களுடன் கொட்டாவ நகரிலிருந்து இரவு 9 மணியளவில் இந்த முச்சக்கர வண்டியில் ஏறி, தலகல பகுதிக்குச் செல்ல வேண்டுமென குறிப்பிட்டுள்ளனர்.
சாரதிகளுக்கு எச்சரிக்கை
அதனைதொடர்ந்து, பின்னால் இருந்த ஒருவர் கைகளால் தனது கண்களை மூடிக்கொண்டு மிளகாய் தூள் போன்ற ஒன்றைப் பூசி முச்சக்கர வண்டியிலிருந்து வெளியே தள்ளப்பட்டதாக பாதிப்புக்குள்ளான சாரதி காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவம் குறித்து மொரகஹதென்ன காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் அவ்வப்போது நடப்பதாகவும், வாடகைக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்துபவர்கள் இரவில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

