மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து – 3 பேர் காயம்
Sri Lanka Police
Accident
Death
By Thulsi
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (06) பிற்பகல் நுவரெலியா, உடப்புசல்லாவ பிரதான வீதியிலுள்ள இராகலை - புரூக்சைட் பகுதியில் இடம்பெற்றது.
மேலதிக விசாரணை
குறித்த வாகனம் வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக இராகலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த சிறுவன், பெண் ஒருவர் மற்றும் வேனின் சாரதி ஆகியோர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பாக இராகலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி