சற்றுமுன் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர
புதிய இணைப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன்னர் நாடாளுமன்றிற்கு வருகைத்தந்து தனது உரையை ஆரம்பித்துள்ளார்.
இன்றைய (25) நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் நடவடிக்கைகள் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில் காலை 9:30 மணிக்குத் தொடங்கின.
இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவது குறித்த பிரேரணை தொடர்பாக கருத்து தெரிவிப்பதற்காகவே ஜனாதிபதி இவ்வாறு நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

முதலாம் இணைப்பு
சற்றுமுன்னர் ஆரம்பமான இன்றைய நாடாளுமன்ற அமர்வு
இன்றைய (25.06.2026) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.
காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.
அதன்படி, காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 மணி முதல்11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 11.00 முதல் மாலை 5.30 ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் போதைப்பொருள் அச்சுறுத்தலினை எதிர்த்துப் போராடுதல் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு பிரேரணை விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
திறைசேரியின் மில்லியன் டொலர் மோசடி...! பின்னணியில் அரசாங்க ஆதரவாளர் - சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
4 நாட்கள் முன்