தேசிய மக்கள் சக்தி எம்.பியாக பதவியேற்ற நிஷாந்த ஜயவீர
புதிய இணைப்பு
தேசிய மக்கள் சக்தியின் யூ.டி. நிஷாந்த ஜயவீர (Nishantha Jayaweera) இன்று (09) காலை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுள்ளார்.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் அவர் பதவி ஏற்றுக்கொண்டார்.
கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவின் (Harshana Suriyapperuma) பதவி விலகலைத் தொடர்ந்து வெற்றிடமான தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு யு.டி.நிஷாந்த ஜயவீரவின் பெயர் சமீபத்தில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
இன்றைய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்
இன்றைய (09.07.2025) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.
காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.00 வரை நடைபெறவுள்ளது.
அதன்படி, காலை 09.30 முதல் 10.00 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 (1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 11.00 முதல் 11.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை11.30 முதல் மாலை 5.00 வரை 2019.04.21 இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான எதிர்க்கட்சியின் ஒத்திவைப்பு விவாதத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
