இன்றைய நாடாளுமன்ற அமர்வு சற்றுமுன்னர் ஆரம்பம்
இன்றைய நாளுக்கான (22.05.2025) நாடாளுமன்ற அமர்வுகள் காலை 09.30 முதல் மாலை 5.30 வரை நடைபெறவுள்ளது.
சபாநாயகர் தலைமையில் ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வில் பல்வேறு விடயங்கள் விவாதிக்கப்படவுள்ளன.
அதன்படி, காலை 9.30 முதல் 10 மணி வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காலை 10.00 முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் காலை 11.00 முதல் 11.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டள்ளது.
காலை11.30 முதல் மாலை 5.00 வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படவுள்ளதுடன், ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான பத்து தீர்மானங்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாலை 5.00 முதல் 5.30 வரை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் நாளை (23), குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவை (திருத்த) யோசனையின் இரண்டாம் வாசிப்பு, விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
