கடந்த 15 நாட்களில் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள் -தொடர்ந்தும் முதலிடத்தில் இந்தியா
Sri Lanka Tourism
United Kingdom
India
By Sumithiran
இலங்கையின் பொருளாதார நெருக்கடி தற்போது சுமுக நிலையை அடைந்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகையும் மாதாந்தம் அதிகரித்து வருகிறது.
இவ்வாறு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் நாட்டின் வருமானம் உயர்வடைவதுடன் பலருக்கும் வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.
குறிப்பாக வாகனதாரிகள், சுற்றுலா வழிகாட்டிகள், ஹோட்டல்கள் என பலரும் பயன்பெற்று வருகின்றனர்.
கடந்த 15 நாட்களில்

இந்த நிலையில் 2023 ஓகஸ்ட் மாதத்தின் முதல் 15 நாட்களில் 77,552 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜூலை மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் நாளாந்த சராசரி வருகை 4,614 ஆக பதிவாகியிருந்த நிலையில், ஓகஸ்ட் மாதத்தில் அது 5170 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியா, பிரித்தானியா, சீனா ஆகிய நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளே ஓகஸ்ட் மாதத்தில் அதிகளவில் வருகை தந்துள்ளனர்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்… 23 மணி நேரம் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி