கிளிநொச்சியில் நடைபெற்ற பாரம்பரிய உணவுக் கண்காட்சி (படங்கள்)
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் எற்பாட்டில் பசுமைப் பூங்கா வளாகத்தில் இன்று(23) பாரம்பரிய உணவு வகைகளின் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றிருந்தது.
குறித்த நிகழ்வானது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரால் நாடாவை வெட்டி, வைபவரீதியாகத் திறந்துவைக்கப்பட்டது.
வாழ்வாதார மேம்பாடு
இப் பாரம்பரிய உணவு கண்காட்சியில் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட மட்பாண்ட உணவு பொருட்கள், பழவகைகள், சத்துமாக்கல் என பல பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுமார் 28 விற்பனைக் கூடங்களில் உணவுவகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
உள்ளூர் உற்பத்தி மற்றும் உற்பத்தியாளர்களின் சுயதொழிலினை மேம்படுத்துவதனூடாக அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்ததுவதனை நோக்காகக் கொண்டே இந்த நிகழ்வு மாவட்டச் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதிகாரிகள் பங்கேற்பு
இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் மற்றும் அரச அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



