மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Colombo Jaffna Weather Floods In Sri Lanka
By Sathangani Nov 27, 2024 04:44 AM GMT
Report

புதிய இணைப்பு

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்ற நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

நேற்று (26) வரை இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம் அதிகரித்ததால் இன்று (27) அதிகாலை மேலும் ஒரு வான்கதவு திறக்கப்பட்டது.

இதனால் சென்கிளயர் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதுடன், மேல் கொத்மலை அணைக்கட்டுக்கு கீழ் ஆற்றுப்பகுதியை பயன்படுத்துபவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

அத்தோடு, விமலசுரேந்திர, காசல்ரீ ஆகிய நீரேந்தும் பகுதிகளில் அதிகமான நீர்மட்டம் காணப்படும் நிலையில் விமலசுரேந்திர நீர்தேக்கத்தின் அணைக்கட்டிற்கு மேலாக நீர் வெளியாகுவதோடு, காசல்ரீ நீர்தேக்க பகுதிகளில் தாழ்வான பிரதேசத்தில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்கும்படி அதிகாரிகளினால் பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Traffic Disruption On The Colombo Jaffna Road

முதலாம் இணைப்பு 

நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையினால் ஹொலம்புவ பகுதியில் சிறியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், களனி கங்கையின் நீர்மட்டமானது கிளென்கோர்ஸ், கித்துல்கல, தெரணியகல மற்றும் நோர்வூட் ஆகிய பகுதிகளில் அதிகரித்துள்ளது.

அதேநேரம், நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் தல்கஹகொட பகுதியில் சிறியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் மகாவலி கங்கையின் நீர்மட்டம் நாவலப்பிட்டி மற்றும் பேராதெனிய ஆகிய பகுதிகளில் அதிகரித்து வருகிறது.

வெள்ளத்தில் மூழ்கிய ஏ9 வீதி - வெளியான முக்கிய அறிவிப்பு

வெள்ளத்தில் மூழ்கிய ஏ9 வீதி - வெளியான முக்கிய அறிவிப்பு

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு

அத்துடன், மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் மனம்பிட்டிய பகுதியில் சிறியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் யான் ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் ஹொரவப்பொத்தானை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Traffic Disruption On The Colombo Jaffna Road

அதேநேரம், மா ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், யக்காவௌ பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், தெதுறு ஓயாவின் நீர்மட்டம் மொரகஸ்வௌ பகுதியிலும், மஹா ஓயாவின் நீர்மட்டம் படல்கம பகுதியிலும் அதிகரித்துவருகிறது.

மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் தந்திரிமலை பகுதியில் அதிகரித்துள்ளதாகவும் தெதுரு ஓயா, ராஜாங்கனை, கவுடுல்ல, யான் மற்றும் பராக்கிரம சமுத்திரம் ஆகிய நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் திறப்பு வீதம் அதிகரிக்ககூடும் என நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலை : வவுனியாவில் பாடசாலைகளுக்கு விடுமுறை

நிலவும் சீரற்ற காலநிலை : வவுனியாவில் பாடசாலைகளுக்கு விடுமுறை

பயணிகளுக்கு கோரிக்கை 

அத்துடன், பல பகுதிகளில் ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் மேலும் பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக குறித்த நீர்த்தேக்கங்களை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானமாக செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Traffic Disruption On The Colombo Jaffna Road

அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக மல்வத்து ஓயாவை சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடிய சாத்தியம் நிலவுகிறது.

அதற்கமைய, மஹாவிலச்சி, வெங்கலச்செட்டிக்குளம், நானாட்டான், முசலி மற்றும் மடு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மல்வத்து ஓயாவை அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்களும், அவ்வழியாகச் செல்லும் பயணிகளும் இது தொடர்பில் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அநுர அரசில் இனரீதியான பாகுபாடு இல்லை : அமைச்சர் அறிவிப்பு

அநுர அரசில் இனரீதியான பாகுபாடு இல்லை : அமைச்சர் அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026