கிளிநொச்சியில் பன்றி பண்ணையாளருக்கு ஏற்பட்ட துயரம்
கிளிநொச்சி(kilinochchi) செல்வாநகர் கிராமத்தில் பன்றி பண்ணையில் வளர்க்கப்பட்டஅனைத்து பன்றிகளும் வைரஸ் தாக்கம் காரணமாக இறந்து விட்டதாக பண்ணை உரிமையாளர் கவலை தெரிவித்துள்ளார்.
பல இலட்சங்கள் முதலீடு செய்து பன்றி பண்ணையை நடாத்தி வந்த நிலையில் தற்போது நாடாளவிய ரீதியில் பரவி வரும் வைரஸ் நோய்த்தாக்கம் காரணமாக தங்கள் பண்ணையில் உள்ள அனைத்து பன்றிகளும் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ள அவர் இதன் மூலம் 75 இலட்சத்திற்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நூற்றுக்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழப்பு
தன்னுடைய பண்ணையில் உள்ள 150 வரையான பெரிய பன்றிகளும், 100 இற்கு மேற்பட்ட பன்றி குட்டிகளும் இறந்துவிட்டதாக தெரிவித்துளள அவர். இந்த வைரஸ்த்தாக்கம் ஏற்பட்டவுடன் பன்றி ஒரு நாள் உணவு உட்கொள்ளாது இருக்கும் என்றும் மறு நாள் நடுங்க தொடங்கும் எனவும் தொடர்ந்து அவை இறந்துவிடும் எனவும் நோய்த்தாக்கம் ஏற்பட்டு இரண்டு நாட்களுக்குள் பன்றிகள் இறந்து விடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
முற்றுமுழுதாக பண்ணை தொழிலை அழித்த வைரஸ்
சுற்றுச் சூழல் முதல் சுகாதார துறை எனத் அனைத்து மட்டங்களிலும் அனுமதி பெற்று பெருமளவு நிதியினை முதலீடு செய்து ஆரம்பித்த தொழில் வெற்றிகரமாக சென்றுகொண்டிருந்த நிலையில தற்போது இந்த வைரஸ் தாக்கம் எனது பண்ணையை முற்று முழுதாக அழித்துவிட்டது.
மீளவும் இந்த தொழில் துறையை என்னால் ஆரம்பிக்க முடியுமா என்ற நிலைமையே தற்போது காணப்படுகிறது. அரசோ அல்லது உரிய திணைக்களங்களோ இதற்கான நட்டஈட்டை ஓரளவு தந்துதவினால் என்னால் மீண்டும் பன்றி வளர்ப்பு தொழிலை ஆரம்பிக்க முடியும் எனவும் பண்ணை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |