தொடருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
கரையோர மார்க்கத்தின் தொடருந்து சேவைகள் இரத்துச் செய்யப்படும் நிறுத்தப்படும் என தொடருந்து திணைக்களம் (Department of Railways) தெரிவித்துள்ளது.
கரையோர மார்க்கத்தின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (23) மற்றும் நாளை (24) பல தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
தொடந்துவ மற்றும் பூஸா இடையேயான கடலோர கரையோர மார்க்கத்தின் பல தொடருந்து சேவைகள் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரியா அறிவித்துள்ளார்.
தொடருந்து சேவைகள் இரத்து
அதன்படி, காலி தொடருந்து நிலையத்திலிருந்து காலை 05.15 மணிக்கு கொழும்பு கோட்டைக்கு புறப்பட திட்டமிடப்பட்ட தொடருந்து எண் 8319 மற்றும் மருதானை தொடருந்து நிலையத்திலிருந்து நண்பகல் 12.10 மணிக்கு காலிக்கு புறப்பட திட்டமிடப்பட்ட தொடருந்து எண் 8788 ஆகிய தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
காலி தொடருந்து நிலையத்திலிருந்து அதிகாலை 05.00 மணிக்கு கொழும்பு கோட்டைக்கு புறப்பட திட்டமிடப்பட்ட தொடருந்து எண் 8327 சமுத்திரதேவி காலி தொடருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 மணி நேரம் தாமதமாக காலை 06.30 மணிக்கு பயணத்தைத் தொடங்கும்.
காலி தொடருந்து நிலையத்திலிருந்து அதிகாலை 04.10 மணிக்கு கொழும்பு கோட்டை நோக்கி புறப்படும் தொடருந்து எண் 8320, காலை 08.50 மணிக்கு காலிதொடருந்து நிலையத்திலிருந்து பயணத்தைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 5 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
4 நாட்கள் முன்