இராணுவத்தினர் வெளியேறிய காணியில் நடக்கும் சட்டவிரோத செயல் - பொதுமக்கள் கடும் விசனம்

Sri Lanka Army Sri Lanka Police Mullaitivu Sri Lankan Peoples
By Thulsi Nov 23, 2024 05:51 AM GMT
Report

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மன்னாகண்டல் வசந்தபுரம் கிராமத்தில் நிலைகொண்ட இராணுவத்தினர் கடந்த தீபாவளி அன்று காணியினை விட்டு வெளியேறியுள்ள நிலையில் அங்கு இராணுவத்தினால் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட தேக்கமரங்கள் அறுக்கப்பட்டு ஏற்றப்பட்டுள்ளது.

வசந்தபுரம் கிராமத்தில் விடுதலைப்புலிகளின் வனவளத்திணைக்களத்தினரின் பண்ணையாக காணப்பட்ட 20 ஏக்கர் காணியில் 2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னர் இராணுவத்தினர் முகாம் அமைத்து வசித்து வந்துள்ளார்கள்.

இந்த நிலையில் 14 ஆண்டுகளின் பின்னர் 2024 ஆம் 28.10.2024 அன்று இராணுவத்தினர் வெளியேறிய நிலையில் மன்னாகண்டல், வசந்தபுரம், கெருடமடு மக்களால் கட்டிட பொருட்கள் உடைக்கப்பட்டு அவர்கள் தேவைக்காக ஏற்றி சென்றுள்ளார்கள்.

தமிழர் பகுதியில் நடமாடும் சந்தேக நபர்கள்: காவல்துறையினர் விடுத்த வேண்டுகோள்

தமிழர் பகுதியில் நடமாடும் சந்தேக நபர்கள்: காவல்துறையினர் விடுத்த வேண்டுகோள்

பயன்தரு தேக்கமரங்கள்

இந்தநிலையில் குறித்த காணியில் பயன்தரு தென்னைமரங்கள் மற்றும் வேப்புமரம்,தேக்கமரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன

இராணுவத்தினர் வெளியேறிய காணியில் நடக்கும் சட்டவிரோத செயல் - பொதுமக்கள் கடும் விசனம் | Trees Destroyed In Army Control Area

ஆனால் தற்போது 25 வரையான தேக்கு மரங்கள் அறுக்கப்பட்டு சட்டவிரோதமான முறையில் ஏற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கவலை தெரிவித்துள்ளார்கள்.

புதிய அரசாங்கம் மாவீரர் நினைவேந்தல்களை தடுக்காது உரிமையை மதிப்பார்கள்! தமிழர் தரப்பு நம்பிக்கை

புதிய அரசாங்கம் மாவீரர் நினைவேந்தல்களை தடுக்காது உரிமையை மதிப்பார்கள்! தமிழர் தரப்பு நம்பிக்கை

வெள்ளப்பெருக்கினை தடுப்பதற்காக மரங்கள்

விடுதலைப்புலிகள் காலத்தில் இருந்து வளர்க்கப்பட்ட தேக்கமரங்கள் குறித்த காணியின் அருகில் போராறு காணப்படுவதால் வெள்ளப்பெருக்கினை தடுப்பதற்காகவும் மரங்கள் நாட்டப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளன.

இராணுவத்தினர் வெளியேறிய காணியில் நடக்கும் சட்டவிரோத செயல் - பொதுமக்கள் கடும் விசனம் | Trees Destroyed In Army Control Area

இராணுவத்தினர் இருக்கும் போது பாதுகாப்பாக காணப்பட்ட இந்த மரங்கள் தற்போது சட்டவிரோதவாசிகளால் வெட்டப்பட்டு குற்றிகளாக ஏற்றப்பட்டுள்ளமையினை காணக்கூடியதாக உள்ளது.

இது குறித்து பிரதேச வாசிகளிடம் கேட்டபோது இவ்வாறு சட்டவிரோதமாக மரம் ஏற்றுபவர்கள் தொடர்பில் காவல்துறையினர் மற்றும் சம்மந்தப்பட்ட திணைக்களத்தினர் ஏன் அக்கறை காட்டவில்லை உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அங்குள்ள ஏனைய இயற்கை வளங்களான மரங்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

தமிழர் பகுதிகளிலிருந்து வெளியேறும் இராணுவங்கள்: பின்னணி இது தான்..!

தமிழர் பகுதிகளிலிருந்து வெளியேறும் இராணுவங்கள்: பின்னணி இது தான்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024