இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை அலுவலகத்தில் இரா.சம்பந்தனுக்கு அஞ்சலி!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கு (R. Sampanthan) அஞ்சலி செலுத்தும் வகையில் வட்டுக்கோட்டையில் தமிழரசுக் கட்சியின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வானது இன்று (1) இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை அலுவலகத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, துயரின் வெளிப்பாடாக அலுவலகத்தின் முன்றலில் கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
அஞ்சலி நிகழ்வுகள்
இதனையடுத்து அன்னாரின் திருவுருவ படத்திற்கு ஈகைச்சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், முன்னாள் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் பாலசந்திரன், வலிகாமம் மேற்கு முன்னாள் தவிசாளர் நாகரஞ்சினி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி மகளிர் அணி, தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
![Gallery](https://cdn.ibcstack.com/article/45ec90da-a144-486f-a3f2-155ecd27867c/24-6682be1942b5e.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/0f2c870e-2b2b-4d74-9f93-bae07ad74d18/24-6682be19bbd34.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/5d44ff1d-5931-4d70-bcb2-316534bc58f5/24-6682bf99b5423.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/f6e437b8-d944-4fd8-80d2-1bdff8d37e3f/24-6682bf9a379c3.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/b1f42c1b-c73c-4baf-91ed-244d6623bff9/24-6682bf9ab7b65.webp)
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)