பிரபாகரத் தமிழனின் பேராண்மை எங்கே... தப்பிக்கத் துடிக்கும் ராஜபக்ச எங்கே - தமிழன் வீரத்திற்குத் தலைவணங்கு - வைரமுத்து இட்ட பதிவு(photo)
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள ராஜபக்ச குடும்பத்திற்கெதிரான மக்களின் ஆர்ப்பாட்டத்தை அடுத்து பிரதமர் பதவியிலிருந்து விலகிய மகிந்த ராஜபக்ச தற்போது எங்கிருக்கிறார் என்ற தகவல் இன்று வரை வெளியாகவில்லை.
அவர் திருகோணமலை சிறிலங்கா கடற்படை முகாமில் உள்ளார் என ஒரு தகவலும் திருகோணமலையில் உள்ள ஒரு தீவில் உள்ளார் என மற்றுமொரு தகவலும் வெளியாகி வருகின்றது.
இந்த நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து விடுதலைப்புலிகளின் தலைவரரையும் மகிந்த ராஜபக்சவையும் ஒப்பிட்டு தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அவரது பதிவு வைரலாகி வருகின்றது.
நான்கு பக்கம்
— வைரமுத்து (@Vairamuthu) May 11, 2022
மரணம் சூழ்ந்தபோதும்
'தாயகம் பிரியேன்
தாய்மண்ணில் மரிப்பேன்' என்ற
பிரபாகரத் தமிழனின்
பேராண்மை எங்கே...
ஊர் கொந்தளித்த
ஒரே மாதத்தில்
நாடு கடக்கத் துடிக்கும்
ராஜபக்ச எங்கே...
ஓ
சர்வதேச சமூகமே!
இப்போதேனும்
தமிழன் வீரத்திற்குத்
தலைவணங்கு#SriLanka
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
