தமிழர் பிரதேசத்தில் அதிகரிக்கும் காட்டு யானைகளின் அட்டகாசம்

Trincomalee Elephant
By H. A. Roshan Nov 22, 2025 01:29 PM GMT
H. A. Roshan

H. A. Roshan

in சமூகம்
Report

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பாலம்போட்டாறு கிராம சேவகர் பிரிவில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக அப் பிரதேச மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

குறித்த கிராமத்தில் மாலை வேலையில் யானை ஊருக்குள் புகுந்து பயிர்களை துவம்சம் செய்து விட்டு செல்வதாக தெரிவிக்கின்றனர்.

மயிரிழையில் உயிர் தப்பிய விவசாயி

பாலம் போட்டாறு,பத்தினிபுரம்,இக்பால் நகர் கிராம மக்களின் அன்றாட தொழிலாக தோட்டச் செய்கை,விவசாயம் என காணப்படுகிறது. காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் மேட்டு நிலப் பயிர்கள் உட்பட நெற் செய்கை விவசாயத்தையும் நாசமாக்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

தமிழர் பிரதேசத்தில் அதிகரிக்கும் காட்டு யானைகளின் அட்டகாசம் | Trinco Increasing Elephant Poaching

தென்னை,வாழை உட்பட பல பயிரினங்களையும் துவம்சம் செய்துள்ளதாகவும் துவிச்சக்கர வண்டியில் வந்த விவசாயி ஒருவரை தாக்க முற்பட்ட போது தான் துவிச்சக்கர வண்டியை விட்டு ஓடியதில் மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் தெரிவித்தார்.

எத்தனை அதிகாரிகள் வந்தும் கண்டுக்கொள்ளபடாத திருகோணமலை பேருந்து நிலையம்

எத்தனை அதிகாரிகள் வந்தும் கண்டுக்கொள்ளபடாத திருகோணமலை பேருந்து நிலையம்

  ஊருக்குள் படையெடுக்கும் யானைகள்

குறித்த கிராமத்தின் பிரதான வீதியில் யானை வேலி அமைத்தாலும் ஊருக்குள் படையெடுக்கும் யானைகளை கட்டுப்படுத்தி தங்களது உயிர்களை, உடமைகளை பாதுகாக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றனர்.

தமிழர் பிரதேசத்தில் அதிகரிக்கும் காட்டு யானைகளின் அட்டகாசம் | Trinco Increasing Elephant Poaching

அத்துடன் பெரும்போக நெற் செய்கை விதைத்து 45 நாட்களை கடந்துள்ள நிலையில் நெற்பயிர்ச் செய்கையையும் அழித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

05 போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு விதிக்கப்பட்டது மரண தண்டனை

05 போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு விதிக்கப்பட்டது மரண தண்டனை

உயிர் போன பின்பு தான் வருவார்களா

 அழிவுக்கான நஷ்ட ஈடுகளை கேட்டால் ஒரு ஏக்கருக்கு ரூபா 3000,4000 வரை தருகின்றனர் விதை நெல் ஒரு ஏக்கருக்காக சுமார் 7000 ரூபாவாக உள்ளது இனியும் எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் எனவும் தேர்தல் காலங்களில் மாத்திரம் வரும் அரசியல்வாதிகள் தற்போது உயிர் போன பின்பு தான் வருவார்களா எனவும் காட்டு யானைகளின் அச்சுறுத்தலுக்குள்ளான பிரதேச குடியிருப்பாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழர் பிரதேசத்தில் அதிகரிக்கும் காட்டு யானைகளின் அட்டகாசம் | Trinco Increasing Elephant Poaching

தங்களது பிள்ளைகளை வைத்துக் கொண்டு இரவு நேரங்களில் பீதியுடன் தூங்க வேண்டியுள்ளதாவும் பாடசாலைகளுக்கு அனுப்பவும் பயத்துடனான நிலை நிலவுவதாகவும் தெரிவிக்கின்றனர். காட்டு யானைகளின் தொல்லையில் இருந்து உயிர்களை பாதுகாக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.

கடுகன்னாவ மண்சரிவில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கடுகன்னாவ மண்சரிவில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


Gallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021