இந்தியாவின் பொறிக்குள் இலங்கை: இலக்கு வைக்கப்படும் திருகோணமலை துறைமுகம்! தீட்டப்படும் எதிர்வியூகம்

Trincomalee Sri Lanka Sri Lankan political crisis India
By Kiruththikan Jun 29, 2022 06:41 AM GMT
Kiruththikan

Kiruththikan

in இந்தியா
Report

உதவிக்கரத்தின் பின்னணியில் துறைமுகம்

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு நீட்டிவரும் உதவிக்கரத்தின் பின்னணியில் திருகோணமலை துறைமுகத்தை பெறும் திட்டமே காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இவ்வாறான நிலைமை உருவாகினால் அனைத்து கட்சிகளும் பிரிவினை இல்லாது ஒன்றாக எதிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு சுட்டிக்காடினார்.

எதிர்கால உதவிகள் குறித்து பகிரங்கம்

இந்தியாவின் பொறிக்குள் இலங்கை: இலக்கு வைக்கப்படும் திருகோணமலை துறைமுகம்! தீட்டப்படும் எதிர்வியூகம் | Trincomalee Port India Help Sri Lanka

நாட்டுக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உயர் மட்ட குழு இலங்கை சார்ந்து மேற்கொள்ளப்போகும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து எந்த வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

அனால் முன்னைய காலங்களில் இந்திய பிரதிநிதிகள் நாட்டுக்கு விஜயம் செய்தால் , எதிர்கால உதவிகள் குறித்து பகிரங்கமாக அறிவிப்பார் என்றும் சுட்டிக்காடினார்.

இந்தியா ஏற்கனவே வழங்கியுள்ள கடன்களுக்காக பல வேலைத்திட்டங்களை தமக்கு வழங்குமாறு கோரியுள்ளது.

திருகோணமலை துறைமுகமே இலக்கு

இந்தியாவின் பொறிக்குள் இலங்கை: இலக்கு வைக்கப்படும் திருகோணமலை துறைமுகம்! தீட்டப்படும் எதிர்வியூகம் | Trincomalee Port India Help Sri Lanka

அத்தோடு திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த நிலப்பரப்பினையும் கோரியுள்ளதாகவும் தெரியவருகிறது.

திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த நிலப்பரப்பினைக் கோரினால், அடுத்த கட்டமாக திருகோணமலை துறைமுகமே அவர்களது இலக்காகக் காணப்படும்.

அரசாங்கத்தினால் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் அனைவரும் கட்சி பேதமின்றி ஒன்றிணைந்து அதனை எதிர்க்க வேண்டும்.

ராஜபக்சாகளுக்கு எதிராக வழக்கு 

இந்தியாவின் பொறிக்குள் இலங்கை: இலக்கு வைக்கப்படும் திருகோணமலை துறைமுகம்! தீட்டப்படும் எதிர்வியூகம் | Trincomalee Port India Help Sri Lanka

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாட்டுக்கு விஜயம் செய்த இந்த சந்தர்ப்பத்தில், அமெரிக்காவின் எமில்டன் வங்கி ராஜபக்சாகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது.

நாட்டுக்காக வழங்கப்பட்ட பல நிதி உதவிகள் வெளிநாட்டு வங்கிகளில் ராஜபக்சாக்களின் பெயர்களில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக குறித்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறு ஆட்சியாளர்கள் மீது வெளிநாடுகளில் வழக்கு தொடரப்பட்டதில்லை.

எனவே தற்போது இலங்கைக்கு உதவுவதானது ராஜபக்ஷாக்களை மேம்பாடடையச் செய்யும் செயற்பாடாகும் என்று சர்வதேசத்தின் மத்தியில் ஒரு நிலைப்பாடொன்று தோற்றம் பெற்றுள்ளது.

சர்வதேசத்தின் மத்தியில் பொய்யாகிய அரசாங்கம்

இந்தியாவின் பொறிக்குள் இலங்கை: இலக்கு வைக்கப்படும் திருகோணமலை துறைமுகம்! தீட்டப்படும் எதிர்வியூகம் | Trincomalee Port India Help Sri Lanka

 இந்த அரசாங்கம் சர்வதேசத்தின் மத்தியில் பொய்யாகியுள்ளது. தற்போது முடக்கம் என்று அறிவிக்கப்படாவிட்டாலும், நாடு இயல்பாக முடங்கியே காணப்படுகிறது.

கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருக்கும் வரை சர்வதேசத்தின் உதவிகள் கிடைக்கப் பெறாது என்பதை அவர் உணர வேண்டும்.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் நல்லாட்சி அரசாங்கத்தில் கொண்டு வரப்பட்ட 19 ஆவது திருத்தம் அல்ல.

மாறாக இந்த திருத்தமானது எந்த வகையிலும் நிறைவேற்றதிகார அரச தலைவர் அதிகாரங்களைக் குறைப்பதாக இல்லை.

இந்த அரசாங்கம் தற்போதாவது ஆட்சியை ஒப்படைத்து வெளியேற வேண்டும்.

தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தல்

இந்தியாவின் பொறிக்குள் இலங்கை: இலக்கு வைக்கப்படும் திருகோணமலை துறைமுகம்! தீட்டப்படும் எதிர்வியூகம் | Trincomalee Port India Help Sri Lanka

தற்போது தேர்தல் நடத்தப்பட்டால் அதற்கு நிதியுதவியளிப்பதாக வெளிநாடுகளின் தூதுவர்கள் எம்மிடம் தெரிவித்துள்ளனர்.

அதே போன்று அரச உத்தியோகத்தர்களும் இலவசமாக தேர்தல்கள் கடமைகளில் ஈடுபடுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே விரைவில் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.

இந்தியாவின் பொறிக்குள் இலங்கை: இலக்கு வைக்கப்படும் திருகோணமலை துறைமுகம்! தீட்டப்படும் எதிர்வியூகம் | Trincomalee Port India Help Sri Lanka

ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024