எப்படி சாத்தியமானது போர் நிறுத்தம்..! ட்ரம்பின் அசர வைக்கும் மர்ம நடவடிக்கை
தனது முக்கிய அதிகாரிகளுக்கு கூட தெரிவிக்காமல் அவர்களிடம் ஆலோசனை கூட கேட்காமல் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டு அனைவரையம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.
மிகவும் இரகசியமாக கையாளப்பட்ட ட்ரம்பின் இந்த நடவடிக்கை தொடர்பாக தற்போது தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
போர்நிறுத்தம் செய்ய ட்ரம்ப் அழுத்தம்
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் ட்ரம்பின் சிறப்புத் தூதுவர் ஸ்டீவ் விட்கோப் ஆகியோர் உதவியால் போர் நிறுத்தம் செய்ய ட்ரம்ப் அழுத்தம் கொடுத்துள்ளார். இவர்கள் மூன்று பேரும், ஈரானிடம் நேரடி மற்றும் மறைமுக வழிகளில் போர் நிறுத்தம் செய்யும் வழிகளை கையாண்டு இருக்கின்றனர்.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியதாவது;
மத்தியஸ்தத்திற்கு உதவிய கட்டார்
கட்டார் இதற்கு மத்தியஸ்தம் செய்ய உதவியது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் ஈரான் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியவர்களுடன் பேசிய பின்னர், திடீரென போர் நிறுத்த அறிவிப்பை ட்ரம்ப் வெளியிடுகிறார்.
போர் நிறுத்த விவாதங்களில் கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானி பங்கெடுத்து இருந்தார். கடந்த சனிக்கிழமை ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது போர் நிறுத்த முடிவுக்கு மற்றொரு பக்க பலமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
