சரணடையுங்கள் அல்லது மரணத்தை சந்தியுங்கள்: ஈரானியப் படைகளுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை
ஈரானிய ஆயுதப் படைகள் உடனடியாகச் சரணடைய வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறினால் அவர்கள் நிச்சயமான மரணத்தைச் சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் உரையாற்றும்போது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC), இராணுவம் மற்றும் காவல் பிரிவின் அனைத்து உறுப்பினர்களும் ஆயுதங்களைக் கீழே போடுமாறு நான் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.
புதிய தலைவர்
நீங்கள் சரணடைந்தால், நீங்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவீர்கள்.
இல்லையெனில், நீங்கள் மரணத்தை எதிர்கொள்வீர்கள்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, உலகெங்கிலும் உள்ள ஈரான் தூதுவர்கள் தாங்கள் இருக்கும் நாடுகளில் தஞ்சம் கோருமாறும் ஒரு புதிய மற்றும் சிறந்த ஈரானை உருவாக்க உதவுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அத்தோடு, கொல்லப்பட்ட ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்குப் பதிலாக புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் விடயத்தில் தான் தனிப்பட்ட ரீதியில் ஆர்வம் காட்டுவதாகவும் கமேனியின் மகன் முஜ்தபா கமேனி அந்தப் பதவிக்குத் தகுதியற்றவர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தரைவழித் தாக்குதல்
இதற்கிடையில், இலங்கைக் கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பலான “IRIS Bushehr” கப்பலில் இருந்த 208 ஊழியர்கள் தற்போது இலங்கை அதிகாரிகளின் பாதுகாப்பான கட்டுப்பாட்டில் இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் அவர்களின் உயிர்களைக் காக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் இந்த மோதலில் இலங்கை நடுநிலை வகிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், ட்ரம்பின் இந்த எச்சரிக்கையை நிராகரித்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, “அமெரிக்காவின் தரைவழித் தாக்குதலை எதிர்கொள்ள ஈரான் தயாராக உள்ளது.
எமது நாட்டின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது ஈரான் மக்களின் உரிமை, அதில் வெளிநாடுகள் தலையிட முடியாது” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |