தஞ்சம்கோரிய ஈரான் போர்க்கப்பலுக்கு திருமலையில் கண்டம் வருமா.....
போரியல் கலையில் சமச்சீரற்ற போர்க்களங்களுக்கு (Asymmetric warfare -ஏசமற்றிக் வோர்பயார்) முக்கிய இடம் உள்ளது. ஏறக்குறைய இவ்வாறான ஒரு பின்னணியில் தான் ஈரான் மேற்பார்த்த மத்திய கிழக்கின் மோதல் களம் இன்று ஏழாவது நாளுக்குள் நகர்ந்துள்ளது.
இந்த சமச்சீரற்ற போர்க்களமானது மிகப்பலமான தரப்புடன் ஒப்பீட்டுரீதியில் அந்தளவுக்கு பலம் இல்லாத தரப்புகள் திறமையாக வெளிப்படுத்தும் போர்க்குணம் சார்ந்த யுக்திகள் சார்ந்தது. ஈழத்தமிழர்களின் தரப்பில் 1987 இல் இந்திய படையுடன் புலிகள் போரிட்டது போன்ற உதாரணங்கள் உள்ளன.
இப்போது வளைகுடாவில் அந்தவகையில் பெரும் செலவீனமான ஒரு போரை அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தினாலும் சிலநூறு டொலர்கள் செலவுடன் உருவாக்கப்படும் ஈரானிய ஆளில்லா வான்கலங்கள் (ட்ரோன்கள்) வளைகுடாவின் அமெரிக்க நிலைகளில் உள்ள மில்லியன் டொலர் பெறுமதிகொண்ட தளபாடங்களுக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்துகிறது.
ஆனால் இந்த சமச்சீரற்ற போரில் ஈரானால் எத்தனை நாட்களுக்கு தாக்குப்பிடிக்க முடியும் என்ற நிலைமை உள்ளது. பலவீனமாக கருதப்படும் தரப்புகளின் இரகசிய ஆயுதங்களை துல்லியமாக கணிக்க தவறுபவர்கள் எவ்வளவுதான் வலிமையான தரப்புகளாக இருந்தாலும் இறுதியில் தோற்றுவிடுவார்கள் என போர்க்கலையின் பிதாமகர் சன் சூ கூறுகிறார்.
இந்த தத்துவார்த்தத்தை உண்மையென நிருபிக்க ஈரான் இப்போதைக்கு முயல அந்த நாட்டில் இருந்து சில ஆயிரம் கிலோமீற்றர் தூரத்தில் உள்ள இலங்கையில் ஈரானிய கடற்படை சார்ந்த அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.
கடந்த ஒருவாரத்துக்குள் 30 ஈரானிய போர்ககப்பல்கள் அமெரிக்காவால் தாக்கி அழிக்கப்பட்டுள்ள நிலையில் ஈரானிய போர்கலங்களுக்கு எதிரான அமெரிக்காவின் நாசகார பண்டோராப்பெட்டி இந்து சமுத்திரத்திலும் திறந்துகொள்ள சிறிலங்காவும் இந்த போர்ச்சூழல் ராஜதந்திர கொதிநிலைக்குள் மாட்டுவதாக தெரிகிறது.
அமெரிக்காவால் ஏற்கனவே இலங்கைக்கு அருகில் வைத்து ஈரானிய போர்க்கப்பலான தெனா மூழ்கடிக்கப்பட இதேபோன்ற அபாயத்தை எதிர்நோக்கிய இன்னொரு ஈரானிய போர்க்கப்பலான புஷேர் அமெரிக்க அடியை தவிர்க்க தனது இயந்திரங்களில் ஒன்று பழுதடைந்துவிட்டது என ஒரு காரணத்தை சொல்லி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து தஞ்சத்தை பெற்று திருமலை துறைமுகத்துக்கு நகர்கின்றது.
சிறிலங்கா தற்போது ஈரானிய போர்க் கப்பலுக்கு தஞ்சம் வழங்கினாலும் ஈரானிய கடற்படையை முற்றாக அழிக்கும் நோக்கத்தில் இருந்து பின்வாங்காது என நேற்றும் அமெரிக்கா சூளுரைத்துள்ளது.
இதனால் ட்ரம்ப் அனைத்துலக விதிகளை மதித்து இந்தக்கப்பலை இலங்கையில் விட்டுவைப்பாரா என்ற விடயத்தில் அநுர தரப்புக்கும் ஐயமும் பயமும் உள்ள நிலையில் இந்த விடயங்கைளை மையப்படுத்தி வருகிறது செய்திவீச்சு….
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |