எரிபொருள் மற்றும் எரிவாயுவை ஏற்ற அமெரிக்கா நோக்கி படையெடுக்கும் கப்பல்கள் :ட்ரம்ப் இட்ட பதிவு
முழுமையாக காலியான ஏராளமான எண்ணெய் கப்பல்கள், எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஏற்றிக்கொள்வதற்காக அமெரிக்காவை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று(11) சனிக்கிழமை தெரிவித்தார்.
"உலகிலேயே மிகப்பெரிய கப்பல்களில் சில உட்பட, முற்றிலும் காலியான ஏராளமான எண்ணெய் கப்பல்கள், உலகின் மிகச்சிறந்த மற்றும் 'இனிமையான' எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஏற்றிக்கொள்வதற்காக, தற்போது அமெரிக்காவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன.
நம்மிடம் அதிக எண்ணெய் உள்ளது
அடுத்த இரண்டு பெரிய எண்ணெய் வளம் கொண்ட நாடுகளின் மொத்த எண்ணெய் இருப்பை விட நம்மிடம் அதிக எண்ணெய் உள்ளது - அதுவும் உயர் தரத்தில்," என்று ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆறு வாரங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரடிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கு முன்பு, வோஷிங்டன் ஏற்றுக்கொள்ள வேண்டிய சில சிவப்பு வரிகளை தெஹ்ரான் வகுத்த நிலையில், மூத்த அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் சனிக்கிழமையன்று இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தானிய மத்தியஸ்தர்களுடன் சந்தித்துக் கொண்டிருந்தபோது அவரது பதிவு வெளியானது.
வரலாற்றிலேயே உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் மிக மோசமான இடையூறை ஏற்படுத்தியுள்ள, முற்றுகையிடப்பட்ட ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய்க் கப்பல்களிடம் ஈரான் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று ட்ரம்ப் இந்த வாரத் தொடக்கத்தில் கூறியிருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |