இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் மீண்டும் மூக்கை நுழைக்கும் ட்ரம்ப்
இந்தியா – பாகிஸ்தான் இடையே உருவான போர் பதற்றத்தை தன்னுடைய தலையீட்டின் மூலம் கட்டுப்படுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், அணு ஆயுத திறன் கொண்ட இரண்டு தெற்காசிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட கடும் மோதல் முழுமையான போராக மாறுவதற்கு முன், தன்னால் அது தடுக்கப்பட்டதாகவும் இதன் மூலம் பெரும் அபாயம் தவிர்க்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா மறுப்பு
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் தலைவர்களுடனும் தனக்கு நல்ல உறவு இருப்பதாக தெரிவித்த ட்ரம்ப், அதுவே இரு தரப்பையும் சமாதானத்திற்கு கொண்டு வர உதவியதாக கூறியுள்ளார்.

Image Credit: O Globo
ஆனால், இந்த விவகாரத்தில் ட்ரம்ப் முன்வைக்கும் கூற்றுகளை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது.
ஒப்பந்தம்
கடந்த ஆண்டு பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது.

இருப்பினும், சில நாட்களுக்குள் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் அந்த நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |