ஈரான் போர் விரைவில் முடிவுக்கு...! ட்ரம்ப் அறிவிப்பு - அடுத்து நடக்கப் போவது
ஈரானுடனான போர் மிக விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் பாகிஸ்தானில் ஈரானுடன் இரண்டாவது சுற்று நேரடிப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் டொனால்ட் ட்ரம்ப் சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.
ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தை
பாகிஸ்தானில் வார இறுதியில் முடங்கியிருந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, அமெரிக்க அதிகாரிகளுக்கும் ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்களுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் வியாழக்கிழமை மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஜனாதிபதியின் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில், ஜனாதிபதி ட்ரம்பின் புதிய அறிவிப்பு, சர்வதேச சந்தையில் நிலவும் பதற்றத்தைக் குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகள், தெஹ்ரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் செறிவூட்டல் திட்டங்கள் தொடர்பாக கடந்த வார இறுதியில் பாகிஸ்தானில் ஈரான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அடுத்து என்ன நடக்கும்
பேச்சுவார்த்தைகளில் எந்த திருப்புமுனையும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டாலும், " பெரும் முன்னேற்றம் " ஏற்பட்டுள்ளதாகவும், இந்த மோதலின் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் ஈரானே தீர்மானிக்கும் நிலையில் இருப்பதாகவும் வேன்ஸ் திங்களன்று தெரிவித்துள்ளார்.

முடிவு எடுக்கும் அதிகாரம் இப்போது அவர்களிடம் தான் உள்ளது," என்று வேன்ஸ் "ஸ்பெஷல் ரிப்போர்ட்" நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார்.
"அடுத்து என்ன நடக்கும் என்று நீங்கள் கேட்டால், அடுத்து என்ன நடக்கும் என்பதை ஈரானியர்கள்தான் தீர்மானிப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்." என துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தெரிவித்துள்ளார்.