புடினுக்கு ட்ரம்ப் வைத்த செக்: இன்னும் பத்தே நாட்களில் முடிவு!!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரில் அமைதி ஒப்பந்தம் செய்வதற்கான கால அவகாசத்தை சுருக்கியுள்ளார்.
முதலில் கொடுத்த 50 நாட்களின் காலக்கெடுவை தற்போது 10 முதல் 12 நாட்களுக்குள் முடிவுக்கு வர வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நம்பிக்கை இழந்த ட்ரம்ப்
"நான் புடினிடம் பல முறை பேசியுள்ளேன். அவர் ஒப்பந்தத்திற்கு தயாராக உள்ளார் என நினைத்தேன். ஆனால் பின்னர் கீவ் போன்ற நகரங்களுக்கு ரொக்கெட் வீசி பொதுமக்களை கொல்லுகிறார்," என ட்ரம்ப் கூறியுள்ளார்.
பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மருடன் ஸ்காட்லாந்தில் பேசிய ட்ரம்ப், ரஷ்யா தொடர்ந்து முறைகேடான தாக்குதல்களில் ஈடுபடுவது தனது நம்பிக்கையை சீர்குலைத்துவிட்டதாகவும், இதனால்தான் காலக்கெடுவை சுருக்க நேர்ந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
100% வரி எச்சரிக்கை
அத்தோடு புடினின் போர்நிறுத்த முடிவின் தாமதம் குறித்து பேசியுள்ள ட்ரம்ப், “இது தேவையற்ற தாமதம். முடிவு ஏற்கனவே தெரிந்திருந்தால், ஏன் காத்திருக்க வேண்டும்?” என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், அமைதி ஒப்பந்தம் இல்லை என்றால், ரஷ்யாவுடன் வணிகம் செய்பவர்களுக்கு 100% வரி விதிக்கப்படும் எனவும், கூடுதல் தணிக்கை மற்றும் தடைகள் நடைமுறைப்படுத்துவதாகவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
