ஈரானுக்கு உதவி! சீனாவுக்கு ட்ரம்ப விடுத்த எச்சரிக்கையால் வலுக்கும் பதற்றம்
ஈரானுக்குச் சீனா ஆயுதங்களை வழங்கினால் அந்த நாடு பெரிய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய தனிப்பட்ட செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.
சீனா ஈரானுக்கு உதவக்கூடும் என்ற அமெரிக்க உளவுத்துறையின் தகவல்கள் குறித்து அந்த ஊடகம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், அவ்வாறு நடந்தால் பெய்ஜிங் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளார்.
உளவுத்துறை மதிப்பீடுகள்
அடுத்த சில வாரங்களுக்குள் ஈரானுக்குப் புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க சீனா தயாராகி வருவதாக உளவுத்துறை மதிப்பீடுகள் தெரிவிப்பதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

Image Credit: Angus Reid Institute
போர்நிறுத்தச் சூழலைப் பயன்படுத்தி ஈரான் தனது ஆயுத பலத்தைப் புதுப்பித்துக் கொள்ள முயற்சிப்பதையே இந்த தகவல்கள் வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அடுத்த மாத தொடக்கத்தில் ட்ரம்ப் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அவரது இந்த எச்சரிக்கை பெரும் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |