ஈரான் தலைவர்களுக்கு ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை!
ஈரானில் நடக்கும் போராட்டங்களுக்கு மத்தியில் அந்நாட்டு தலைவர்கள் தன்னிடம் பேச்சு நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஈரான் உயர் தலைவர் அயதுல்லா கமேனி தலைமையிலான அரசு, அமெரிக்காவுடன் பேச்சு நடத்த விரும்புவதாக தெரிவித்துள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அப்பாவி மக்கள்
தேவையின்றி அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள்.
இது தொடர்ந்தால் அந்த பேச்சுக்கு முன்பாகவே அமெரிக்க இராணுவம் செயலில் இறங்க வேண்டியிருக்கும்.

ஈரானின் தற்போதைய சூழலை அமெரிக்க இராணுவம் மிகத் தீவிரமாக கண்காணித்து வருகின்றது.
அங்குள்ள நிலைமை குறித்து ஒவ்வொரு மணி நேரமும் எனக்கு தகவல் வந்து கொண்டே இருக்கின்றது.
ஈரான் அல்லது அதன் ஆதரவு நாடுகள் ஏதேனும் தாக்குதலில் ஈடுபட்டால் இதற்கு முன் அவர்கள் கண்டிராத அளவுக்கு மிகக் கடுமையான தாக்குதலை அவர்கள் எதிர்கொள்வர்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |