பற்றி எரியும் ஈரான்...! களம் இறங்கும் அமெரிக்கா - ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு
ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா ஈரானுக்கு எதிராக அதிரடியாக களமிறங்கும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்கின் மிக முக்கிய பொருளாதார நாடான ஈரானில் டிசம்பர் மாத இறுதியில் அமெரிக்க டொலருக்கு எதிராக ரியால் வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது.
இதையடுத்து, ஈரானில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதைக் கண்டித்து நடைபெற்று வரும் போராட்டங்கள் ஆறாவது நாளை எட்டியுள்ளன.
ஈரானிய இராணுவம்
இந்தநிலையில், குறித்த போராட்டக்காரர்களை ஈரானிய இராணுவம் தாக்கும் நிலை ஏற்பட்டால் அமெரிக்க படைகள் அவர்களை பாதுகாக்க முன்வரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஈரான் வழக்கம் போல அமைதியான போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்றால் அமெரிக்கா அவர்களை மீட்கும்.
( @realDonaldTrump - Truth Social Post )
— Fan Donald J. Trump 🇺🇸 TRUTH POSTS (@TruthTrumpPosts) January 2, 2026
( Donald J. Trump - Jan 02 2026, 2:58 AM ET )
If Iran shots and violently kills peaceful protesters, which is their custom, the United States of America will come to their rescue. We are locked and loaded and ready to go. Thank you for… pic.twitter.com/yaj5Mev7xN
நாங்கள் தாக்குதலுக்கு தேவையான அனைத்து ஆயுதங்களுடனும் செல்லத் தயாராக இருக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அமெரிக்கா, ஈரானின் அணுசக்தி உற்பத்தியை குறிவைத்து தாக்குதலை நடத்தியிருந்தது.
இதனை தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்த நிலையில் பின்னர் போர் அமைதியை எட்டியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருமலை ஐந்து மாணவர் படுகொலை… நீதியின்றி 20 ஆண்டுகள்… 14 மணி நேரம் முன்