திடீரென பதவி விலகும் அமெரிக்க உளவுத்துறை இயக்குனர் துளசி
அமெரிக்காவின் புலனாய்வு பிரிவின் இயக்குனர் துளசி கப்பார்ட் (Tulsi Gabbard) தனது பதவியை பதவி விலகல் செய்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து அறிந்த ஒருவரை மேற்கோள் காட்டி, வெள்ளை மாளிகை காபார்டை பதவி விலக செய்ய வற்புறுத்தியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து அமெரிக்க உளவுத்துறையின் புதிய இயக்குநராக ஆரோன் லூகாஸ் என்பவரை நியமித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
வெளியேறும் நான்காவது பெண்மணி
தனது கணவரின் நோய் நிலைமை காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாக அவர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அறிவித்துள்ளார்.

"எனது பதினொரு வருட திருமண வாழ்க்கையில் ஆபிரகாம் எனது பாறை போன்ற பலமாக இருந்தார். எனது தொழிலுக்கும் தற்போதைய பதவியின் பொறுப்புகளுக்கும் அவர் அளித்த ஆதரவு அளப்பரியது.
ஆபிரகாமுக்கு அரிய வகை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், இந்த சவாலான தருணத்தில் நான் அவருடன் இருக்க வேண்டும்.
எனவே, ஜூன் 30 ஆம் திகதி முதல் எனது பதவி விலகலை ஏற்றுக்கொள்ளுங்கள்" என துல்சி தனது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், துளசி கப்பார்ட் தனது பதவியில் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார் என கூறியுள்ளார்.

கணவரை மீண்டும் நல்ல ஆரோக்கியத்திற்கு கொண்டு வர விரும்புவது சரியான முடிவு எனவும் ஆபிரகாம் விரைவில் குணமடைந்து சிறப்பான ஆரோக்கியத்தை பெறுவார் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் இவரது பதவிக்காலத்தில் ஈரான் மற்றும் வெனிசுலாவில் நடந்த இராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய தேசியப் பாதுகாப்பு விவகாரங்களில் அவர் வெள்ளை மாளிகையால் ஓரங்கட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |